Wednesday, March 28, 2007

கிறிஸ்துவின் தொலைந்து போன சமாதி

சமீபத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தொலைக்காட்சி ஒலி ஒளிப் படம் இது. வழக்கம் போல பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற கிறிஸ்துவ மதச் சார்புள்ள நாடுகளில் வெளியிடப்பட்டு இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ளது.

1980களில் ஜெருசலம் நகரில் பல கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, அப்போது அந்த ஊரில் ஆங்காங்கே இருக்கும் பல பழமையான சமாதிகள் இடிக்கப் படுகின்றன. தீவிர மத நம்பிக்கைகள் கொண்ட நாடான இஸ்ரேலில் இது போன்ற சமாதிகள் இடிக்கப்படுவதால் முணுமுணுப்புகள் எழுந்தன.

ஆகவே அந்த பழங்காலத்து சமாதிகளை காக்க அந்த சமாதிகளில் உள்ள பொருட்களை இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை பல குடோன்களில் அடைத்து வைக்க ஆரம்பித்தது.

இங்கு சமாதி என்ற சொல் சரியானது அல்ல என்றே சொல்ல வேண்டும். இவை நம் ஊரில் இருக்கும் சமாதிகள் போன்றவை அல்ல.

ஒரு குகை அதில் வைக்கப்பட்டிருக்கும் 1x1 அடி நீளமுள்ள சில பெட்டிகள். இவைதான் அந்த காலத்து யூத சமாதிகள்.

இந்த யூத சமாதிகள் வைக்கும் பழக்கம் மிகக் குறைவான காலமே இருந்து வந்தது. சுமார் 100 ஆண்டுகள் மட்டுமே இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அதற்கு பின்னால் படையெடுப்புகள் போன்ற காரணங்களால் இவை முற்றிலுமாக குறைந்து போய் விட்டது.

யூத மத பழக்கத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட சமாதி குகைகள் இருந்து வந்தன. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தவுடன் இறந்தவரின் உடலை அந்த குகைக்குள் சென்று வைப்பார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்து அந்த உடலில் மிஞ்சி இருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் வைத்து அந்த குகையில் ஒரு பகுதியில் வைத்து விடுவார்கள். இது தான் அந்தக் காலத்து யூத சமாதிகள்.

குடும்பத்தினர் யாருடைய பெட்டியில் யாருடைய எலும்புகள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு கொள்ள இறந்தவரின் பெயரை பெட்டியில் எழுதி வைப்பார்கள்.

இந்த பெட்டிகளை Ossuary(ஆஸூவரிகள்) என்று சொல்லுவார்கள். இந்த ஆஸீவரிகளில் உள்ள பெயர்கள் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை தொகுத்து வைத்துள்ளது.

இந்த ஒளி ஒலிப் படத்தை எடுத்த இயக்குனர் அந்த தொகுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளை படிக்கும் சமயம் அதில் உள்ள ஒரு பெயர் அவரை ஈர்த்தது. அந்தப் பெயர்தான்

யேசுவா பார் யகோசே

ஹீப்ரூவில் இருக்கும் இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் நமக்குக் கிடைப்பது

Jesus son of Joseph

இந்தப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது 1980களில்.

இங்கு சற்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

புனித மேரிக்கும் ஜோசப் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேளையில், புனித மேரி பரிசுத்த ஆவியால் தனக்கு குழந்தை உண்டானதாக அறிவித்தார். ஜோசப் அவரை திருமணம் செய்து கொண்டு கிறிஸ்துவையும் தத்தெடுத்துக் கொண்டார். ஆகவே கிறிஸ்து அவர்களின் வளர்ப்புத் தந்தை பெயர் ஜோசப். மேரிக்கும், ஜோசப்புக்கும் வேறு குழந்தைகளும் உண்டு. அதாவது கிறிஸ்து அவர்களுக்கு மரியாம்னே, சலோமி என்ற இரண்டு தங்கைகளும் ஜோசப், ஜேம்ஸ், சைமன், ஜுடாத் என்ற நான்கு தம்பிகளும் உண்டு.

மேலும் கிறிஸ்து அவர்கள் சிலுவையில் அறைந்து இறந்த உடன் அவரை ஒரு குகையில் சென்று வைத்ததாகவும் அந்த குகைக்கு மூன்று நாளுக்கு பின்னால் சென்ற மேரி மதலான்(மேரி மங்க்டாலின்) அங்கு கிறிஸ்துவின் உடலைக் காணாமல் தேட கிறிஸ்து உயிர்தெழுந்து மேரி மதலான் அம்மையாருக்கு காட்சியளித்தார்.

இவை அனைத்தும் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் இருந்து நமக்குத் தெரிய வரும் தகவல்.

இந்த சரித்திர உண்மைகளைப் ஒருவர் அறிந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவருக்கு, ஜோசப் மகன் இயேசுவின் சமாதி என்ற செய்தியைக் கேட்டவுடன், இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையதாக இருக்கலாமோ என்ற கேள்வி தோன்றி இருக்க வேண்டுமல்லவா? ஏன் இந்தக் கேள்வி இந்த சமாதி கண்டுபிடிக்கப்பட்ட 1980களில் எழவில்லை?

ஏனெனில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமாதி இவ்வளவு சாதாரணமாக கண்டுபிடிக்கப் பட்டிருக்க முடியாது என்று மக்கள் நினைத்ததால் இருக்கலாம்.

இல்லை இயேசு என்ற பெயரும், ஜோசப் என்ற பெயரும் பழங்காலத்து ஜெருசலத்தில் மிக அதிகமாக புழக்கத்தில் இருந்த பெயர். அந்த காலத்து ஜெருசலம் தெருவில் நின்று இயேசு என்று கூப்பிட்டால் 10% சதவீதம் பேர் திரும்பிப் பார்ப்பார்கள். ஆகவே இது அவருடைய சமாதியாக இருக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்கள்.

ஆனால் இந்த ஒளி ஒலிப் படத்தில் இயக்குனரால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் இதனை மேலும் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.

முதலில் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறைக்கு சென்று அந்த சமாதியில் உள்ள மற்ற பெயர்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.

அங்கு கிடைத்த அடுத்தப் பெயர்

மரியா

அதாவது புனித மேரி அல்லது மரியம்.

இயேசு, ஜோசப், மேரி இந்த மூன்று பெயரும் ஒரு குடும்ப சமாதிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கிடைக்கிறது. நமக்குத் தெரிந்த இயேசுவை விடுத்து வேறு ஒரு இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் என்ற மூவர் இருந்திருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுடன் மேலும் அதே சமாதியில் உள்ள வேறு பெயர்கள் ஆராய ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த இன்னொரு பெயர்

யோசே

இந்தப் பெயரையும் நாம் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் காண்கிறோம். இயேசுவின் தம்பி ஜேம்ஸை குறிப்பிடும் ஒரிடத்தில் இந்தப் பெயரை குறிப்பிடுகிறார்கள்.

சரி இப்போது ஜெருசலம் நகருக்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த நகரில் சுமார் ஒரு 60000 பேர் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரையும் ஒரிடத்தில் கூப்பிட்டு வைத்து இயேசு என்பவர்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள் என்றால் 6000 பேர் எழுந்து நிற்பார்கள். ஜோசப் என்று கூப்பிட்டால் 12000 பேர் எழுந்து நிற்பார்கள் மேரி என்று கூப்பிட்டால் 15000 பேர் எழுந்து நிற்பார்கள்.

இப்போது இயேசு என்று கூப்பிடுகிறோம் 6000 பேர் எழுந்து நிற்பார்கள், இயேசு ஜோசப்பின் மகன் என்று கூப்பிட்டால் அதில் பாதி பேர் 3000 பேர் இருக்கிறார்கள் என்று வைப்போம். இந்த இயேசு என்பவருக்கு மேரி என்ற பெயரில் ஒரே இடத்தில் சமாதி அமைக்கும் அளவுக்கு நெருக்கமான சொந்தக்காரர்கள் இருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள் என்றால் எத்தனை பேர் மிஞ்சுவார்கள். அதோடு யோசே என்ற பெயரையும் எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் இருப்பார்கள்?

இந்த சமாதியில் கிடைத்த மற்றொரு பெயர் தான்

மாரா மரியம்னே

இந்தப் பெயர் இது வரை இஸ்ரேலில் கிடைத்துள்ள ஆஸ்சுவரிகள் அனைத்திலும் ஒரே இடத்தில் தான் கிடைத்துள்ளது.

இங்கு மாரா என்பது இன்றும் பூசாரிகளுக்கு கொடுக்கப் பட்டு வரும் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் கிடைப்பது

Master Mariamne

இந்தப் பெயர் பைபிளின் எந்த இடத்திலும் உபயோகப் படுத்தப்படவில்லை. ஆனால் இந்தப் பெயரை வேறு ஒரு மிக முக்கியமான இடத்தில் காண முடிகிறது. 1930களில் கிடைத்த Dead sea scrollsகளில் தான் அது.

அதில் மேரி மதலான் அம்மையாரை இதே பட்டத்துடன் மாரா மரியம்னே என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.

அதே பெயர் இந்த சமாதியிலும் இருக்கிறது.

இது ஒரு மிக அரிய விஷயம். யோசித்துப் பாருங்கள் கிறிஸ்து, புனித மேரி, ஜோசப், யோசே என்ற அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் அந்த குடும்பத்தைச் சேராத ஆனால் கிறிஸ்துவின் மிக நெருக்கமான சீடர்களில் ஒருவரான மதலான் அம்மையாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.

இது மிக மிக அரிதான ஒரு விஷயம் என்று குறிப்பிடுகிறார்கள் இயக்குனர்.

மேலும் இந்த சமாதிகள் மேல் கட்டிடங்கள் கட்டியுள்ளப் பட்டதாக நினைத்திருந்தார் இந்த் ஒளி ஒலிப் படத்தின் இயக்குனர். ஆனால் இந்த சமாதியைத் தேடிச் சென்ற இடத்தில் அவருக்கு அந்த சமாதிக்குள்ளே செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த சமாதியில் அவர் இன்று அமெரிக்க டாலரில் உள்ள முக்கோண வடிவத்தை அந்த சமாதியின் நுழைவாயிலில் கண்டு பிடிக்கிறார்.

இந்த முக்கோணம் knights templar என்பவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு குறியீடு ஆகும். Davinci code படித்தவர்களுக்கு knights templar என்பவர்களுக்கும் வாடிக நகருக்கு இருந்த பகை போன்றவையும், வாடிகன் நகரம் மூலமாக இவர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆனதும், பின் வாடிகனாலேயே படுகொலை செய்யப்பட்டதும் தெரியவரும்.

ஆனால் அந்த சமாதியை மேலும் பார்வையிட முடியாமல் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை இவர்களை வெளியேறச் சொல்லி விட்டது.

இந்தப் படத்தின் இயக்குனர் இந்த ஒளி ஒலிப் படத்தை முடிக்கும் முன் இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையது இல்லையென்றால், இயேசு கிறிஸ்து வாழ்ந்த அதே சமயத்தில் ஜோசப் என்ற தகப்பனார் பெயர் கொண்ட, இரண்டு மேரிக்கள் அவருடைய வாழ்க்கையில் கொண்ட, யோசே என்ற நெருங்கிய சொந்தக்காரர் கொண்ட இயேசு என்ற மற்றொருவர் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லி முடிக்கிறார்.

Tuesday, February 13, 2007

why human race will not make it

There was a discussion on rediff based on if parzania should be released in Gujarat. Some of the replies to the post are

INDIA IS FOR HINDUS COUNTRY ,THEY ARE PRIORITY NOT MUSLIMS. HINDU FIRST - Muslus to to Pakistan

yeah India is for hindus, if muslims wants to stay they should convert to hindus! because you know history very well

What options do Hindus have when Islam teaches its followers to kill or convert Kafirs (Hindus) and the past 1200 years of our history chronologically documents the gradual destruction Hindu/Buddhist/Sikh religions from Sindh to Malay?

And many more comments like this.

I was so frustrated reading the comments that I wrote the following.

The protestors are afraid that the truth will be known to the people of gujarat. But I think that people of gujarat have always known the truth, but have decided to either ignore it or they are extremely happy about it.

After all people in this country are either hindu or muslim or christian or anything except human.

The replies to this post seems to validate this fact once more.

I feel very ashamed right now and heavy hearted and i am more and more sure that human race will not lost long and will end up destoroying one another.


Some of the replies which came back just showed me that humans dont have a chance of survival.

If Senthil and Iqbal, feel ashamed,better they leave the proud country.People of Gujarat do not want to watch Parzania and they know the truth.Nearly 60 Hindus were burnt alive by Muslims in Godhara which the congress and pseudosecularists do not discuss about.what happened in Gujarat after that was the public reaction which Gujarat govt.had controlled immediately.

This guy has written that I should leave the country. First he wanted muslims to leave or he would kill them, now he wants me to leave since I stand for peace. I cant beleive live alongside such savage cruel humans. He is supposed to be from the land of Gandhi. I bet he would have volunteered to kill gandhi if he is alive today.

You are absolutely right that the people of Gujarat know the truth. It appears however that its only you who is unaware of the truth.

If you are ashamed of being in Gujarat or being a Gujarati, or an Indian, you would be better off without writing such comments and supporting such movies.

You and the people who support your view seem to have forgot the longer history when Gujarat and India have suffered at the hands of foreign rulers (read Moghuls).

You also seem to have forgotten that these rulers erased our religious monuments, forcibly converted our people to their religion under fear, etc.

And you feel that the people of India are anything but human. I suggest you change your viewpoint as India and Indians have been one of the most tolerant people and still are.

Its only India that tolerates the bombings of its Parliaments and does not act - for the fear of a full scale war.

Had it been any other country, they would not have been so. But it is the greatness of our country and its people that there was no such adverse situation arising.

In fact you should be proud as regards our country and Gujarat for the development that has taken place. The events in Gujarat although unpleasant regardless of anyones caste and / or community were unpleasant.

But screening of Parzania is not going to raise your head with pride and heavy heart. Moreover it will do the work of adding fuel to the fire and make greener the almost healed wounds of people in Gujarat.


This guy also wants me to leave the country. Should I leave the country because I said I am ashamed of an savage cruel massacare. I cant beleive we have such facist people living along side.

If we have declared war on pakistan for bombing I would have been proud. But as he is saying people are being killed for what happpened 500 - 600 years ago. Should I stand and watch these masscare. These type of people should be termed as psycho's and should be kept far away from humans. These type of people are the ones who opressed and is opressing people for more than 4000 years. Their blood lust have not decreased and wont calm down till they have no one else to kill.

and you must be one of those 'tamilkam' types. So how many wives does Karunanidhi have ??

Ha here comes a racist. People were talking as if I am not Hindu and Indian. Now comes one who says that I am a tamilian. Dude why should I care how many wifes karunanidhi has? what does that has to do with anything? Dont show your ugly racist face here branding me with some one. I bet if these people kill every one termed muslims, they would start killling every one termed tamil. After all its blood they want they dont mind whose blood they would get.

Sunday, February 04, 2007

பெங்களூரில் போலீஸ் குவிப்பு

கர்நாடக நதி நீர் பிரச்சனைக்கு நடுவர் தீர்ப்பு வெளியாவதைத் தொடந்து போலீஸ் பெங்களூரில் குவிக்கப் பட்டுள்ளார்கள். 1991ல் இடைக்காலத் தீர்ப்பு வெளியானதைத் தொடந்து மிகப் பெரியக் கலவரம் வெடித்தது.

இந்த முறையும் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகலாம் என்ற செய்திகளை தொடர்ந்து பெங்களூரில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளார்கள்.

இது போன்ற செய்திகளில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ், கன்னடம் என்று மாநிலங்கள் அளவில் அடித்துக் கொள்வோம்
இந்து முஸ்லீம் என்று தேசிய அளவில்
இந்தியா பாகிஸ்தான் என்று நாடுகள் அளவில்

மனிதனுக்கு மனிதன் என்று தான் வேற்றுமைகளைக் களையப் போகிறானோ?

Friday, February 02, 2007

ஹாரிப் பாட்டர் வெளியாகும் நாள்

ஹாரிப் பாட்டர் ஜூலை மாதம் 21 நாள் வெளியாகும் என்று எழுத்தாளர் ரௌலிங் அவர்களின் வலைத் தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

ஹாரி பாட்டரை நான் படிக்க ஆரம்பித்தது நான்காவது புத்தகம் வெளியான பின்புதான். முதன் முதலில் படித்தது இந்த வரிசையில் வெளியான இரண்டாவது புத்தகமான சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ் புத்தகத்தை தான். மும்பை சென்று திரும்பும் சமயம் சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ் புத்தகத்தை மும்பையில் வாங்கி, சென்னை வந்து சேருவதற்குள் முழு புத்தகத்தையும் படித்து முடித்து, திருச்சி சென்றடைந்த உடனேயே தெப்பக்குளம் சென்று மீதி மூன்று புத்தகங்களையும் வாங்கி வந்து 3 நாட்கள் உறக்கம், உணவு மறந்து படித்து முடித்தேன்.

அடுத்த இரண்டு புத்தகங்களையும் வெளியான அதே நாளில் வாங்கி படித்திருக்கிறேன். ஐந்தாவது, ஆறாவது புத்தகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போல ஏழாவது புத்தகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை என்பது உண்மை.

இதற்கு காரணம் ஹாரிப் பாட்டர் சலித்துப் போனது அல்ல. ஏழாவது புத்தகத்துக்கு அடுத்து வேறு ஹாரிப் பாட்டர் புத்தகம் எழுதப் போவதில்லை என்று ரௌலிங் அறிவித்தது தான் காரணம்.

6 வருடக் கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்த கண்ணாடி அணிந்த மின்னல் வடிவ தழும்பு கொண்ட ஹாரிப் பாட்டர் புத்தகங்கள் இனி மேல் வெளி வராது என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.

இந்தப் புத்தகத்திற்கு வெளி வந்த பின் எதனை நான் அதிகமாக மிஸ் செய்வேன் என்று தெரியவில்லை. அடிக்க அடிக்க நினைவுக்கு வந்தவைகளை கீழே கொடுத்துள்ளேன்

ஹெர்மயோனி ரானுக்கும், ஹாரிக்கும் சொல்லும் கண்டிப்பு கலந்த அறிவுரைகளை.

ரான் அடிக்கும் ஜோக்குகள், பயம் கலந்த வீரம்.

ஸ்நேப் ஹாரியைப் பார்த்து அடிக்கும் வெறுப்பு கலந்த கமெண்டுகள்.

நெவிலியின் வீரம், தன்னம்பிக்கைக் குறைவு.

லூனா லவ்குட்டின் ஏகாந்தம்

புத்தகத்தை கையில் எடுத்ததில் இருந்து படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாத மர்மங்கள்.

இவ்வளவு மர்மங்கள் நிறைந்து இருந்தாலும் நகைச்சுவை இழையோடும் எழுத்தால் உதட்டில் இருக்கும் புன்னகை.

இவை எல்லாவற்றையும் விட ரௌலிங்கின் தலைக்குள் 1990ல் ஒரு ரயில் பயணத்தில் உருவான இந்தக் கதை எப்படி இருக்கப் போகிறது எப்படி முடியப் போகிறது என்பதைக் குறித்த சிந்தனைகள்.

ஜூலை 21ஐ எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் ஜூலை 21 வர பல யுகங்கள் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

Tuesday, January 23, 2007

சேஷன் பேட்டி

விஷய தானம் rediff

When I spoke to T N Seshan, the former chief election commissioner, in 1998, he was very cynical about India. Almost a decade later, as we prepare to celebrate the 60th anniversary of India's Independence, I found Seshan, the man credited with cleaning up the Indian election system, optimistic and upbeat. He spoke at length about terrorism, reservations and the quality of India's political system.
In the first part of the interview, we find out why Mr Clean-up is less cynical about India today.

In 1998 when I interviewed you, you said India was at the crossroads, and if it took the right direction, it could be one of the outstanding countries in the world in the next ten years. Almost ten years have passed. Did India take the right path?

I would say if the right path was due east, we are going in the eastern direction. But we are not fully in the eastern direction; we are a little south of east. There are still corrections to be made; there are still changes to be made. In many areas, we have not done what we should have been doing in the last 8 to 10 years.

Like?

Like, for example, we lost ten valuable years in making sure that all children get education. Mr (President A P J) Kalam has been speaking about it; the others have been speaking about it. There is nothing more important than all children being in school as is promised by the Constitution. We have not done that.

From a completely different angle, we should have learnt to conduct our business particularly in the assemblies and legislatures in a far more disciplined fashion than we do. Yes, in every country, there is a lot of noise made in the parliaments and assemblies but sometimes business is transacted. I don't know whether we could not transact more business than we are currently doing in the parliament and assemblies.

The progress made in the clearance of arrears in court cases is completely unsatisfactory.

Our inability to settle outstanding social and political issues by discussion and negotiation -- rather than by violence and demonstration -- is unfortunate.

We have not put in place an agency to combat the growing menace of terrorism and Naxalism. Terrorism is a worldwide phenomenon now; Bush is worried, Blair is worried, and even Putin is worried. But we could have put this menace in place.

So why do you still say the path taken by India is the right path?

Because democracy is still alive and kicking. The judiciary is still alive and asserting itself whenever necessary. Our education system has not improved as much as it should have but it is no longer the privilege of the rich. Education is available to many. Where there were 10 or 15 engineering colleges, there are 300 today. Even the poorest servant's child can aspire to go into an engineering college or a medical college if he has the merit.

We have improved tremendously in healthcare. Our hospitals have improved enormously. We can get treatment for the most complicated problem with very little delay.

Ten years ago, did you expect India to grow like this?

No. I hoped it would. Did I expect it? I was not sure about expecting.

In 1998, I thought you were more cynical.

Yes, I was more cynical. The answer is, there is reason to be less cynical today than I was ten years ago.

Who will you give credit to for India taking the right path?

Well, I know people will say it is because of my prejudice. But my basic thesis is that the man who laid the foundation was Rajiv Gandhi. He didn't live to implement what he wanted to.

In his first five years of office, he got mired in unnecessary controversy and got sucked in by all kinds of forces. But it was Rajiv Gandhi who laid the foundations of the economic reforms which were implemented by Narasimha Rao and Manmohan Singh. Rajiv Gandhi had visions of modernity even in 1987, '88 and '89.

Rajiv Gandhi died in 1991, and even in 1998, you were not so optimistic.

That is because there were many reasons to be worried about then, and not all reasons to worry have come to pass. On the other hand, many positive things have happened in the last ten years. Many Indian boys and girls have acquitted themselves remarkably well all over the world. Ten years ago, we didn't expect, or we didn't know, this would happen.

Ten years ago, anybody who had an IIT degree collected his degree and went away to America. Today, they are working all over the place; and they are doing fantastically well.

You told me then that a change in the attitude of the people to the country would take place through either a social revolution or a technological revolution.

Yes. Both are happening now. Everybody knows about the technological revolution.


It has made them more self-confident. The young people of 2006 are far more confident than the young people of 1996.

Do you feel the insecurity young Indians felt ten years ago about many things including employment are no longer there today?

They are less insecure than they were ten years ago. I don't say they are no longer insecure. Even today, thousands of graduates have no jobs but that is less of a worry today than ten years ago. The feeling of insecurity was terrible in those days. Today, it is not that terrible.

Do you feel because of the technological revolution, the attitude of other countries to India also has changed?

Undoubtedly. China has made unbelievable progress, physically. They have built roads, they have built steel factories and they have made enormous progress in all fields. They are growing at 10 per cent per year. But today, it is not as if China is progressing and India is not progressing at all.

When Blair made a speech to the Labour conference in Manchester, he spoke about China and India. Though we have not done as well as we should have in certain sectors like manufacturing, in hardware, etc, there are other areas where we have done extremely well; like in the automobile industry, mobile technology, etc.

Certain industries which were on the verge of collapse like the textile industry have taken a turnaround.

What about a social revolution?

That one third of humanity is treated as second class or third class citizens is no longer valid today. Nobody asks you: Are you a Harijan, are you an Adi Dravida, are you this or that. You are taken at face value. If you can do the job, you can do the job -- whether it is in journalism or IT or any such field.

Among the poorer people, people who were called the Dalits, there was, mistakenly, an aggressive attitude in some cases. If you keep that aside, most people have a healthy social attitude today.

What do you attribute as the reason behind such an attitude? There was not a visible social revolution in India.

The reason most importantly is affluence. The poorest servant has a television set, a fridge, a telephone, a mobile telephone...

So, it is not education that has brought about the change...

To some degree, education has, but availability of jobs, income, technology, etc has brought about the change.

When liberalisation was first introduced in India, experts spoke about the trickle down effect, but till now, the criticism has been that this has not taken place.

It's not as if there is a pipe and suddenly everything can come down, nor is it a solid piece of rod through which nothing comes down. Trickling down does not mean coming down of 100 per cent. It has to percolate through, and percolation has taken place. There is no question about it.

Monday, January 22, 2007

மார்டீனா ஹிங்கிஸ்

தினமும் 8 மணிக்கு எழுந்து அவசர அவசரமாக அலுவலகம் செல்ல துவங்கும் என்னை சில நாட்களாக 5.30 மணிக்கு எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி.

இன்று அதிகாலை எழுந்து டென்னிஸ் போட்டியில் ஒரு அதிமேதாவியாக என்னால் கருதப்படும் மார்டீனா ஹிங்கிஸினுடைய போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

பெண்கள் டென்னிஸ் போட்டி என்பது இன்று வலிமையான பெண்களின் பிடியில் இருக்கிறது. இன்று உலகத் தர வரிசையில் முதல் 20 இடங்களை எடுத்துக் கொண்டால் ஷரபோவா, மொரிஸிமோ, ஹெனின் என்று எல்லோருமே உடல் வலிமை, டென்னிஸ் பந்தை வலிமையாக திருப்பி அடிக்கும் திறன் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

எனக்கு கிரிஷ் எவர்ட் போல நளினமாக விளையாடும் பெண்களையே அதிகம் பிடிக்கும். ஆனால் அவர் காலத்தில் முதல் 20 இடங்களில் 15 பெண்கள் நளினமான முறையில் விளையாடுபவர்களாகவே இருந்தார்கள்.

இன்று fore handகளுக்கும் back handகளுக்கும் நடக்கும் பலப்பரிட்சைகளில் நளின ஆட்டக்காரர்கள் மிக குறைந்து போய் விட்டார்கள்.

இன்று மெல்ல மடிந்து கொண்டிருக்கும் இந்த ரக விளையாட்டு வீரர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தர வரிசையில் இருப்பவர் ஹிங்கிஸ் ஒருவரே.

இன்று நடந்த போட்டியில் லீ நா என்ற சீன வீராங்கனையுடன் போட்டி இட்டார்.

முதல் செட்டில் 98% முதல் சர்வீஸ்களை சரியாகப் போட்ட லீ நா தன்னுடைய forehandஐயும், backhandஐயும் விட்டு விளாசியதுக் கண்டு மனம் தளர்ந்து மீண்டும் போய் தூங்கலாமா என்று மனதுக்குள் ஆலோசனை செய்து சரி அடுத்த ஒரு செட்டையும் பார்ப்போம் என்று உட்கார்ந்திருந்தேன்.

Law of averages என்ற விதிப்படி லீ நா தன்னுடைய முதல் சர்வீஸ்களில் சில தவறுகளை செய்யத் துவங்க தற்பாதுகாப்பாக ஆரம்பித்து எதிராளி தவறு செய்யும் வரை பந்தை எல்லைக் கோடுகளுக்குள்ளே வைத்து விளையாடத் துவங்கினார் ஹிங்கிஸ்.

அவ்வப்போது கொஞ்சம் அதிக தற்பாதுகாப்பாக ஆடத் துவங்கி சில மின்னல் வேக forehandஐயும், backhandஐயும் சந்திக்க வேண்டியதாகி விட்டது ஹிங்கிஸுக்கு ஆனால் அவருடைய களத்தில் மூளையை உபயோகித்து விளையாடும் திறன், எதிராளிக்கு எப்போதுமே சுலபமாக ஒரு பாயிண்டைக் கூட விட்டுத் தராத திறன் ஆகியவற்றால் போராடி வெற்றி பெற்றார்.

அடுத்து கிம் கிளைஸ்ட்ஜர்ஸுடனான போட்டி. போன தடவை கால் இறுதியில் இவரிடம் தான் தோற்றுப் போனார் ஆனால் இந்த தடவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெட்டராக இருக்கும் ஹிங்கிஸ் ஜெயிப்பார் என்றே நம்புகிறேன்.

Sunday, January 21, 2007

Pursuit of happyness, Cinderalla man

கடந்த வார இறுதியில் இந்த இரு படங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. வறுமையில் உழலும் கதாநாயகர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்ற சாதாரணக் கதை தான். ஆனால் இரு படத்துடனும் என்னை ஒன்றிப் போய் ரசிக்க வைத்தது இரு விஷயங்கள்.

1. இரண்டுமே உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
2. சிறப்பான நடிப்பு மற்றும் இயக்குர்கள் உண்மைக் கதைகளை திறமையாக கையாண்ட விதம்.

கிரிஷ் கார்டனர், ஜேம்ஸ் பிராடோக் ஆகிய இருவரும் 50 ஆண்டுகள் தள்ளி வாழ்ந்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சில ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

கார்டனர் ஒரு திறமையான சேல்ஸ்மேன், தன்னுடைய வாழ்க்கையின் சேமிப்பு எல்லாவற்றையும் ஒரு நவீன இயந்திரத்தை வாங்கி விற்பதற்காக முதலீடு செய்கிறான். ஆனால் அந்த இயந்திரம் சரியாக விற்பனை ஆகாததால் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப் படுகிறான்.

பிராடோக்கும் அதே போலத்தான் தான் குத்துச் சண்டைப் போட்டியில் வென்ற எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறான். ஆனால் 1933 அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சியில் எல்லாப் பணத்தையும் இழக்கிறான். ஒரு குத்துச் சண்டையில் கைகள் உடைத்துக் கொண்டு மேலும் பல போட்டிகளில் தோல்வியுற்றதால் குத்துச் சண்டை சங்கத்தில் இருந்து வெளியேற்றப் படுகிறான். வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப் படுகிறான்.

இருவரும் திறமைசாலிகள், இருவரும் பெரிய தவறுகள் எதுவும் செய்யவில்லை. 1933 Great Depression போது அமெரிக்காவில் இருக்கும் பலர் தங்களுடைய பணத்தை இழந்தார்கள். அதில் இருந்து மீண்டு எழுந்து வருவதற்குள் கை உடைந்து குத்துச் சண்டை சங்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்டது எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான்.

கார்டனர் நிலைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சொல்லலாம். மருத்துவத் துறைக்கு வந்த நவீனக் கருவி எல்லோரும் வாங்குவார்கள் என்று எண்ணி வாங்கிய பின் இதனை யாரும் வாங்க மாட்டார்கள் என்று தெரிந்த உடன், அதனை லாபமில்லாத விலைக்கு விற்று முதலீட்டையும் தொலைத்து அதனால் வருமானமும் இல்லாமல் இருக்கிறான்.

இருவருக்கும் தங்களுடைய குழந்தைகள் தான் உலகம். அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் இருவரும் என்னென்ன செய்கிறார்கள்.

மூட்டை தூக்கி குடும்பத்திற்கு உணவு ஏற்பாடு செய்கிறான் பிராடோக். ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கிறான்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இவர்களை அலைகழிக்கிறது இருவரையும்.

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் கார்டனருக்கு பங்கு வர்த்தக தரகராக முடிவெடுத்து பணிக்கு விண்ணப்பிக்கிறான். ஆனால் அந்தப் பணி அவனுக்கு கிடைக்க 6 மாத Internship செய்ய வேண்டும் என்றும், அந்த சமயத்தில் அவனுக்கு சம்பளம் கிடைக்காது என்றும், 6 மாதம் கழித்து 20 Internகளில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும் பல நிபந்தனைகள்.

இத்தனை நிபந்தனைகள் இருந்தாலும் அவன் அந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்ல ஒப்புக் கொள்கிறான். இதனை அறிந்த அவன் மனைவி அவனை விட்டு விட்டு சென்று விடுகிறாள். அந்த Internship நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டிய நாளுக்கு முந்தைய நாள் அவனை பார்க்கிங் டிக்கெட் கட்டாததற்காக போலீஸில் பிடித்துச் செல்கிறார்கள். அடுத்த நாள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு கலைந்த தலையுமாய், கிழிந்த உடையுமாய் செல்ல வேண்டிய நிலை இருப்பினும் தன் நிலையை விளக்கி அந்த தேர்ச்சி அடைகிறான்.

பிராடோக் நிலைமையும் மிக மோசமாகுகிறது. பணம் இல்லாததால் மின் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் கடும் குளிரில் மின்சார வெப்பம் இல்லை என்றால் சமாளிக்கவே முடியாது. அவனுடைய மனைவி பல இடங்களில் விறகு பொறுக்கி வெப்பமூட்டுகிறாள் ஆனால் மைனஸில் செல்லும் குளிரால் அவனுடைய குழந்தைகளுக்கு காய்ச்சல் வருகிறது.

அதனால் அவனுடைய மனைவி குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள். வீட்டுக்கு வந்து அதனை அறிந்த பிராடோக் குத்துச் சண்டை சங்கத்திற்கு சென்று தனக்குத் தெரிந்தவர்களிடம் பிச்சை கேட்டு பணம் வாங்கி வந்து மின் இணைப்பை சரி செய்து குழந்தைகளை கூட்டி வருகிறான்.

கார்டனர் நிலைமை இன்னும் பரிதாபமாகிறது அவனை வீட்டில் இருந்து வாடகை கொடுக்காததால் வெளியேற்றுகிறார்கள். அரசாங்கம் இலவசமாக நடத்தும் விடுதியில் தினமும் வரிசையில் நின்று இடம் பிடிக்க வேண்டும். அது நிறைந்து விடும் சமயத்தில் ரயில்வே நிலையத்தில் தான் தங்க வேண்டிய நிலைமை.

தினமும் பங்கு வர்த்தக நிறுவனத்தில் காலை முதல் மாலை வரை வேலை செய்து மாலை விரைவாக கிளம்பி வந்து வரிசையில் நின்று இடம் பிடிக்க வேண்டும். இல்லை ரயில்வே நிலையத்தில் தங்க வேண்டும். இதற்கு நடுவில் வேலைக்கு நடக்கும் தேர்வுக்காக படிக்க வேண்டும் என்று மாறி மாறி வேலை செய்கிறான் கார்டனர்.

வறுமை கொடியது என்று கேள்வியுறுகிறோம் ஆனால் அந்த சொல்லாடல் வறுமையின் வலியை முழுக்க காட்டுவதே இல்லை. இருக்க இடமில்லாமல் குளிரில் நடுங்கி மழையில் வாடி வெய்யிலில் வதங்கி, உடுத்த சரியான ஆடை இல்லாமல், உண்ண உணவில்லாமல் இருப்பதன் வலி பலருக்கு புரிவதே இல்லை.

இது என்ன விரும்பி ஏற்கும் வாழ்க்கையா? இவர்களுக்கு நமக்குக் கொடுக்கப் பட்டிருப்பது போன்ற வாய்ப்புகள் கொடுக்கப் பட்டிருந்தால் இவர்கள் இப்படி இருப்பார்களா? சின்னச் சின்னத் தவறுகளுக்கு வாழ்க்கையில் இத்தனை துன்பங்களா?

இதனை விதி என்று சொல்லுவர் வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள். வாழ்க்கையின் எல்லா சுகானுபவங்களையும் அனுபவித்து விட்டு, இவர்களை எளிதாக கீழே தள்ளி விட உபயோகப் படுத்தும் வார்த்தை தான் இது.

வாழ்க்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்து எப்படியாவது மேலே வர மாட்டோமா என்று இவர்களுக்குள்ளும் போராட்டம் இருக்கத் தான் செய்கிறது.

சமூகம்(நான் உட்பட) என்ன சொல்கிறது. இவர்களால் தான் இந்த நாட்டிற்கே கெட்ட பெயர் என்று. சமூகத்தில் அடுத்த தட்டில் இருப்பவர்கள் போன் மார்கெட்டிங் செய்பவர்களை விபச்சாரம் செய்வதாக கூறுகிறார்கள்.

பணம் இருக்கும் அகம்பாவம் தான் இப்படி பேச வைக்கிறது பலரை.

கார்டனரை ரயில் நிலையத்தில் அவன் பிள்ளையுடன் ஓரமாக ஒதுங்கி மூலையில் இருப்பதை பார்த்திருந்தால் அதையேதான் இந்த சமூகம் சொல்லி இருக்கும்.

பிராடோக் தன் பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டி வருவதற்காக பிச்சை எடுப்பது போல தொப்பியை அனைவரிடமும் நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்திருந்தால் உடம்பு நல்லா தானே இருக்கு பிச்சை ஏன் எடுக்கணும்? இதுக்கு செத்து போயிடலாம் என்று பேசி இருக்கும் இந்த சமூகம்.

இது போன்ற மக்களுக்கு சுயமரியாதை இல்லையென்று எள்ளி நகையாடி இருக்கும் இந்த சமூகம்.

அவர்களுக்கு சுயமரியாதை குறைவுதான். பசியும், குளிரும், போராட்டங்களும் நிறைந்த அவர்கள் வாழ்க்கையில் சுயமரியாதை என்பது குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால் கார்டனர், பிராடோக் போன்ற மக்களும் போராளிகள் தான். இவர்களுடைய போர் யாருடைய கடவுள் பெரியவர் என்பது போல முட்டாள்தனமானது அல்ல, என் இனம் பெரியது என்பது போன்ற மூடத்தனத்தை உள்ளடக்கியது அல்ல.

இவர்களுடைய போர் தனக்கும் தன்னை சார்ந்திருப்பவர்களுக்கும் அடுத்த வேலை உணவு கிடைக்க வழி செய்ய வேண்டும், நாளை இதே நிலைமை நீடிக்கக் கூடாது என்பதால் இன்றைய சுயமரியாதை குறைச்சல்களை கண்டு கொள்ளாமல் நாளையை மட்டுமே மனதில் வைத்து முன்னேற வேண்டும் என்பது மாதிரியான போர்.

Its a war for survival to the fittest.

இது போன்று போராடிக் கொண்டிருப்பவர்கள் எப்போதுமே போராடிக் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கை கொடுக்கும் சின்னச் சின்னச் சந்தர்பங்களை உபயோகப் படுத்தி முன்னேறி விடுகிறார்கள்.

பிராடோக்கும் அது போலத்தான். உலகக் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி நடை பெறுவதற்கு முன்பு நேரத்தைக் கடத்த சில போட்டிகள் நடப்பதுண்டு. அந்த மாதிரி போட்டியில் கலந்து கொள்ள முடியாததால் ஒருவர் கடைசி நேரத்தில் வெளியேறி விட பிராடோக்கு கிடைக்கிறது ஒரு சந்தர்ப்பம்.

அந்தப் போட்டி நடக்கும் நாள் உணவருந்தாமல் வருகிறான் பிராடோக். அதனை கடைசி நேரத்தில் தான் கவனிக்கும் மேலாளர் உணவு கொடுக்க கிளவுஸ் ஆகியவை கட்டி இருப்பதால் ஸ்பூன் தேடச் செல்கிறார். உணவைக் கண்ட பிராடோக் ஸ்பூன் தேடும் அளவுக்கு பொறுமை இல்லாததால் அப்படியே தலையை உள்ளே விட்டு உண்ணும் காட்சி பரிதாபத்துக்குறியது.

அந்தப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிராடோக் வெற்றி பெறுகிறான்.

அங்கே கார்டனர் மாலை வேகமாக செல்ல வேண்டும் இல்லையெனில் அரசாங்க விடுதியில் இடம் கிடைக்காமல் ரயில்வே நிலையத்தில் தங்க வேண்டி இருக்கும் என்ற நிலையில் தன்னுடைய வேலையை திறம்பட செய்ய தன்னுடைய தொலைபேசியை கீழே வைக்காமலேயே பேசுவதால் மற்றவர்களை விட 8 நிமிடம் அதிகமாக வேலை செய்ய முடியும் என்பதை கண்டு கொள்கிறான்.

மேலும் தண்ணீர் அருந்த செல்லாமல் இருப்பது, அதன் மூலம் சிறுநீர் கழிக்க அவசியமில்லாமல் போவது ஆகியவற்றின் மூலம் 15 நிமிடம் மற்றவர்களை விட அதிக நேரம் வேலை செய்ய முடியும் என்றும் கண்டு கொண்டு அப்படியே வேலை செய்கிறான்.

பிராடோக் இந்த வெற்றியினால் கிடைக்கும் மேலும் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலும் வெற்றிகள் பெறுகிறான். அந்த வெற்றி மூலமாக உலக சாம்பியன் பட்டத்திற்காக போட்டியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அப்போதைய சாம்பியன் தன்னுடன் போட்டியிட்ட இருவரை செத்துப் போகும் அளவுக்கு அடித்து வென்றவர். இதனை பிராடோகின் மனைவிக்கு தெரிவித்து அவனைப் போட்டியில் இருந்து விலகி விடச் சொல்லி வற்புறுத்திகிறார்கள்.

கார்டனரும் அவனுடைய வேலையில் பல தொல்லைகளை சந்திக்காமல் இல்லை. மேலாளர் காபி கொடுப்பதில் இருந்து, காரை சரியான இடத்தில் நிறுத்துவது முதல் கார்டனரை எடுபிடி வேலையாள் போல உபயோகப் படுத்துகிறார். இது போன்ற வேலையால் முக்கியமான ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்பையும் இழக்கிறார் கார்டினர்.

ஆனால் இவர்கள் போராளிகள் அத்தனைத் தடைகளையும் மீறி பிராடோக் சாம்பியன் பட்டத்தை வெல்கிறான். அப்போதைய உலகச் சாம்பியன் பிராடோக்கை நான் சந்தித்ததிலேயே மிக வீரமான நபர் என்று அறிவிக்கிறார். மேலும் இரண்டு வருடம் சாம்பியனாக இருக்கிறார் பிராடோக். இரண்டாம் உலகப் போரில் கலந்து கொள்கிறார். ஒரு ஊருக்கு தேவையான பாலத்தைக் கட்டித் தருகிறார்.

கார்டினர் அந்த 20 பேரில் முதன்மையாக வந்து வேலையில் சேருகிறார். பின்னர் தனியே பங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இன்று பெரிய கோடீஸ்வராராக இருக்கிறார். வில் ஸ்மித் நடித்த இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

இந்த இரு படங்களிலும் நாயகர்கள் நடிப்பு அற்புதமாக வந்திருக்கிறது. வில் ஸ்மித், ரசஸ் குரோ ஆகிய இருவரும் பிரமாதமா நடித்திருக்கிறார்கள். மேலும் ரசஸ் குரோவின் மனைவியாக வரும் ரெனி ஸ்வல்லேகர், வில் ஸ்மித் மகனாக வரும் ஜேடம் ஸ்மித்(உண்மையிலேயே வில் ஸ்மித்தின் மகன்) ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வாழ்க்கையே வேறு கோணத்தில் பார்க்க வைத்த படங்கள் இவை.