Sunday, February 04, 2007

பெங்களூரில் போலீஸ் குவிப்பு

கர்நாடக நதி நீர் பிரச்சனைக்கு நடுவர் தீர்ப்பு வெளியாவதைத் தொடந்து போலீஸ் பெங்களூரில் குவிக்கப் பட்டுள்ளார்கள். 1991ல் இடைக்காலத் தீர்ப்பு வெளியானதைத் தொடந்து மிகப் பெரியக் கலவரம் வெடித்தது.

இந்த முறையும் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகலாம் என்ற செய்திகளை தொடர்ந்து பெங்களூரில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளார்கள்.

இது போன்ற செய்திகளில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ், கன்னடம் என்று மாநிலங்கள் அளவில் அடித்துக் கொள்வோம்
இந்து முஸ்லீம் என்று தேசிய அளவில்
இந்தியா பாகிஸ்தான் என்று நாடுகள் அளவில்

மனிதனுக்கு மனிதன் என்று தான் வேற்றுமைகளைக் களையப் போகிறானோ?

0 comments: