Wednesday, December 20, 2006

மும்பை குண்டு வெடிப்பு மீள் பார்வை

ஒரிஜனல் கட்டுரை இங்கே

ரெட்டிப்பில் இன்று மும்பை குண்டு வெடிப்பில் இறந்த, பாதிக்கப்பட்ட சிலருடைய கட்டுரைகள் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை இங்கே கொடுத்திருக்கிறேன்.



ரமேஷ் விட்டல் நாயக் ஒரு உடைந்து போன தந்தை



இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரமேஷ் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். பிப்ரவரி 24லில் அவருடைய இளைய பிள்ளையான ரச்ஷனா பாத்ரூமில் தடுக்கி விழுந்து மிக மோசமாக அடிப்பட்டது.

ஜீலை 11ல் இவருடைய இரண்டாவது மகள் நந்தினியை குண்டு வெடிப்பில் இழந்தார். இவரும் இவர் மகன் ஆஷிஷும் ஒரு ஆட்டோமொபைல் பட்டறை வைத்துள்ளார்கள்.

ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மகள்களை இழந்துள்ளேன். வெளியில் பார்ப்பதற்கு உயிரோடு இருப்பது போல தெரியும் ஆனால் உண்மையில் உள்ளே இறந்து விட்டேன்.

ப்ரீத்தி சாவந்த்



இவருடைய கணவர் இந்த ரயில் விபத்தில் காயமடைந்து அப்போது இருந்தே கோமாவில் இருக்கிறார். இவருடைய கணவருக்கும் காய்கறிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

இவருடைய கணவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது கூட தெரியாது.

இவருடைய கணவருக்கு ஐந்து முறை ஆப்பரேசன் நடந்துள்ளது. இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை.

கிளாடிஸ் டீசேல்ஸ்



என்னுடைய தம்பி சான்போர்ட் முதல் வகுப்பு பாஸ் வைத்திருந்தாலும் வழக்கமாக இரண்டாம் வகுப்பில் தான் பயணிப்பான். குண்டு வெடித்த நாளில் முதல் வகுப்பில் பயணம் செய்தான். குண்டு வெடித்த அதே நாளில்தான் எங்களுடைய தாயார் வெளிநாடு சென்றிருந்தார். அங்கே இறங்கிய உடனே திரும்பி வருமாறு ஆகி விட்டது. சான்போர்டின் மரணம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. தம்பியுடைய 10 வயது மகனும், மனைவியும் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவே இல்லை.

குண்டு வெடிப்பில் 187 பேர் மட்டுமே இறந்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் என் தம்பியைத் தேடி நான் சென்ற ஆஸ்பத்திரிகளிலும், பிணகிடங்குகளிலும் இரு(ற)ந்தவர்களின் எண்ணிக்கை கண்டிப்பாக இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஒரு அமைப்பையோ இல்லை மதத்தையோ இல்லை அரசாங்கத்தையோ இல்லை அரசியலையோ குறை கூறி அதன் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது.

இது போன்ற குண்டு வெடிப்புகள் குறைய வேண்டுமெனில் எல்லோரிடமும் மாற்றங்கள் வர வேண்டும்.

ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் துவேஷங்கள், கோபங்கள் குறைந்தாலொழிய மகள்(ன்), கணவர், தம்பி என்று தொலைத்துக் கொண்டே தான் இருப்போம்.

மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் ஜாதிகளின் பெயரால் இன்று சண்டை இட்டுக் கொண்டு பிரிந்திருக்கும் நாம் அனைவரும் நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

எல்லாமே உயிர்தான் எல்லாருமே மனிதர்கள் தான் என்பதை உணர வேண்டும். குல்லா, பட்டை, கிராஸ் என்று நம்பிக்கைகள் அடிப்படையில் நாம் மனிதர்கள் என்பதை மறக்க செய்து விடக் கூடாது.

துவேஷங்களை களையுங்கள் ப்ளீஸ்.

Tuesday, December 19, 2006

sreesanth dance

Friday, December 01, 2006

எயிட்ஸ் விழிப்புணர்வு தின விளம்பரம்

Friday, November 24, 2006

மாஸ்டர் யோடா வீடியோ

ஸ்டார் வார்ஸ் படத்தில் ஜெடாய் நைட்ஸ்(jedi knights) என்பவர்கள் பிரபஞ்சத்தின் அமைதியை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்(நம்ம ஊர் போலீஸ் மாதிரி). இவர்களின் பலம் போர்ஸ்(force) என்பதன் மூலம் கிடைக்கும் இதன் மூலம் இவர்களால் சாமானிய மனிதர்களால் செய்ய இயலாத காரியங்களைச் செய்ய முடியும்.

இவர்களுக்கு ஆசான் மாஸ்டர் யோடா. பச்சை நிறத்தில் குள்ளமாக இருக்கும் இவருடைய பலத்தை இவரின் தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது. அனைவருக்கும் ஆசானான இவர் போர்ஸின் துணை கொண்டு செயற்கரிய செயல்களை செய்பவர். இவரின் வீடியோ ஒன்று youtubeல் இருந்தது. அது கீழே கொடுக்கப் படுகிறது.

Thursday, November 23, 2006

பிடித்த வில்லன்கள்

வில்லன்கள் விஜயகாந்த் படத்தில் வரும் ஆஜானுபாகுவான வில்லன்களில் இருந்து மகாபாரத சகுனி வரை வில்லன்கள் பல விதம்.

பலம் பொருந்திய வில்லன்கள்(தமிழ் சினிமாவில்), பயங்கர அறிவாளியான திட்டங்கள் தீட்டும் வில்லன்கள்(சகுனி போன்றவர்கள்), குறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்கும் வில்லன்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.

சில சமயங்களில் படைப்புகளில் வில்லன்கள் ஹீரோக்களை விட வசீகரிக்கும் வகையில் அமைந்து விடுவார்கள். அமைதிப் படை அல்வா சத்யராஜ், பரட்டை ரஜினி போன்ற கதாபாத்திரங்கள் காலத்திற்கும் அழியாத வில்லன்கள்.

அது போல எனக்குப் பிடித்த வில்லன்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

நந்தினி(பொன்னியின் செல்வன்) - பொன்னியின் செல்வனின் எனக்கு மிகவும் பிடித்தது பாத்திரப் படைப்புளே நந்தினியின் புரிந்து கொள்ள முடியாத பாத்திரம் மிகவும் பிடிக்கும்.

Darth vader(Star wars) - Revenge of the sith படத்தில் முதல் முறையாக Anakin Skywalker, Darth vader உடைய உடை பூண்டு மூச்சை வித்தியாசமாக விடும் சமயத்தில் உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. I am your father என்று Empire strikes back படத்தில் இவர் சொல்லும் சமயம் ஸ்டார் வார்ஸ் கதையே 360 டிகிரி சுற்று வந்தது.

தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் பாத்திரம்( பெயர் தெரியவில்லை ) - நாகேஷ் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்று சொன்னால் பொய்யில்லை.

Lord Voldermort - சுத்தமான அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட தீய சக்தி. இவர் பெயரைக் கூட மக்கள் சொல்ல பயப்பட்டு இவரை he who must not be named என்று தான் அழைப்பார்கள்.

Dark phoneix(XMen) - பிடித்த கார்ட்டூன் வில்லி. ஜீன் என்ற சாதுவான பெண்ணுக்குள் இருக்கும் ஒரு பயங்கரமான ஒரு சக்தி கொண்ட வில்லி. Mutantsகளிலேயே சக்தி வாய்ந்த Mutant Dark phoneix தான்.

உங்களுக்கு பிடித்தவர்களையும் வில்லன் கதாபாத்திரங்களை சொல்லுங்கள்.

வீடியோ விளம்பரம்.



வழக்கமாக இது போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். ஆனால் இந்தப் பணியை செய்பவர்கள் சொந்த செலவில் ஸ்டார் தொலைக்காட்சியில், பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். சொந்தக் காசை செலவு செய்து இது போன்று ஆதரவு திரட்ட முயற்சி செய்பவர்கள் இதில் உண்மையாக ஈடுபட்டுள்ளார்கள் என்று எனக்கு தோன்றியதாலேயே இந்த அளவு திரும்ப திரும்ப பதிவில் இட்டுக் கொண்டிருக்கிறேன்.

நல்லது நடந்தால் நல்லது. திரும்ப திரும்ப இதைப் பற்றியே இடுவதால் கோபப்படுபவர்கள் பொறுத்தருள்க.

http://www.lightamillioncandles.com

கலிகாலம் கன்பார்ம் செய்வது எப்படி?

                                             
நேத்து இணையங்களில் சிறார் ஆபாசத் தளங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு தளத்தில் சென்று உங்கள் ஆதரவை பதிந்து கொள்ளுங்கள் என்று ஒரு பதிவிட்டு இருந்தேன்.

http://rasithathu.blogspot.com/2006/11/blog-post_22.html

http://www.lightamillioncandles.com

அதுக்கு ஒரு 20 பேர் வந்து பார்த்திருக்காங்க. நானே ஒரு 20 பின்னூட்டம் கொடுத்து பலருக்கு காண்பிக்க வேண்டியதா போச்சு.

இன்னைக்கு எப்படி எப்படி பதிவுக்கெல்லாம் பல பின்னூட்டம் கலிகாலம் என்று கன்பார்ம் செய்துக்கலாமில்லை?

டிஸ்கி - நல்ல விஷயத்தைப் பரப்ப பரபரப்பை உபயோகிப்பது சரியா தவறா?

Wednesday, November 22, 2006

சிறார் போர்னோக்கு எதிராக குரல்

சிறார் போர்னோக்கு எதிராக குரல் கொடுங்கள்.

http://www.lightamillioncandles.com/

இணையத்தில் சிறார் போர்னோகிராபிக்கு எதிராக குரல் கொடுக்கும் தளத்திற்கு சென்று உங்கள் குரலையும் பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறார்களால் தங்களுக்காக குரல் கொடுக்க முடியாது.

ஆனால் உங்களால் முடியும்.

உங்களுடைய உதவியால் இந்த தீய வணிகத்தை ஒழிக்க முடியும்.

எங்களுக்கு உங்கள் பணம் தேவையில்லை.

எங்களுக்கு நீங்கள் ஆதரவாக ஒரு மெழுகுவர்த்தி ஏற்றினால் போதும்.

அதிக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டால் இதற்கு எதிராக ஒலிக்கப்படும் குரல்கள் சக்தி வாய்ந்ததாகும்.

இந்த ஆவணம் அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், வணிக நிறுவனங்கள், பணம் கொடுக்கும் நிறுவனங்கள், இணைய வசதி மக்களுக்கு கொடுப்பவர்கள், டெக்னாலஜி கம்பெனிக்கள், சட்ட நிறுவனங்களுக்கு இந்த தீய இணைய கொடுமையை ஒழிக்க உதவும்.

அவர்களுக்கு இணைந்து செயல்படும் சக்தி இருக்கிறது உங்களுக்கு அவர்களை இணைத்து செயல்பட வைக்கும் சக்தி இருக்கிறது.

தயை கூர்ந்து lightamillioncandles.comக்கு வந்து ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிச் செல்லுங்கள் இல்லை தனி மின்னஞ்சல் light@lightamillioncandles.com என்பதற்கு அனுப்புங்கள்.

நாம் இணைந்து இந்த தீய இணைய வணிக சிறார் கொடுமை நடக்கும் தளங்களை அது அழிக்கும் லட்சக்கணக்கான சிறுவர் வாழ்வைத் தடுக்க முடியும்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்கு சொல்லி அவர்களையும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றச் சொல்லுங்கள்.

http://www.lightamillioncandles.com/

The innocent victims of Internet child abuse cannot speak for themselves.

But you can.

With your help, we can eradicate this evil trade.

We do not need your money.

We need you to light a candle of support .

The more candles we light, the more powerful our voice becomes.

This petition will be used to encourage governments, politicians, financial institutions, payment organisations, Internet service providers, technology companies and law enforcement agencies to eradicate the commercial viability of online child abuse.

They have the power to work together. You have the power to get them to take action.

Please light your candle at lightamillioncandles.com or send an email of support to light@lightamillioncandles.com.

Together, we can destroy the commercial viability of Internet child abuse sites that are destroying the lives of innocent children.

Kindly forward this email to your friends, relatives and work colleagues so that they can light a candle too.

Monday, November 20, 2006

ஹீ - ஷீ பிளாக்குகள்

பிளாக்குகள் என்பது நாமெல்லாம் சண்டை போட நம்முடைய கருத்துக்களை வழியுறுத்த என்று எது எதற்கோ உபயோகிக்கிறோம் ஆனால் ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் காதல், ஊடல், தனக்கு மட்டும் தான் என்ற உணர்வு, விவாதங்கள் போன்றவைகளை எழுதி இருக்கிறார் ஒரு பதிவாளர்.

ஆங்கிலத்தில் இருப்பதறக்காக மன்னிக்கவும். பிளாக் டைட்டிலை மட்டும் தமிழ் படுத்தி இருக்கிறேன்.

கீழே மூன்று சாம்பிளுக்கு கொடுத்திருக்கிறேன்.

ஒரு மணி அடித்தால் உன் ஞாபகம்
He in office, receives a call
She: Hello
He: Yes
She: Enna aachu un voice kku? Yaaravadhu kazhutha nerichitaaLa?
He: Err. Who is this?
She: Enna thimira? Yen voice kooda maRandhu poacha
He: Err. Illaye. It sounds very different
She: Seri. Saaingalam seekram vandhudu. Kalayanathukku poganum
He: Koramangala dhaane. It hardly takes 10 minutes from our house
She: Suththam. Kalyanam utharahalli la
He: Huh? Naan invitation la koramangala dhaane parthen.
She: Adi vaanga pore. I am having the invitation in hand. Seekram varaati Priya konnuduva
He: Priya yaaru?
She: Enna aachu unakku. En friend Priya kalyanathukku dhaane poarom
He: En chithappa payyan Karthik kalyanathukku dhaane poarom!!
She: Extn 2631?
He: Sorry this is 2361
She: Sorry. Bye!
(Now our He calls his She on her mobile narrates the incident and starts laughing)
She: Sirikaadha. Thimiru pudichavane
He: What?
She: Yen voice kooda theriyaama eva koodavo ivlo neram pesi irukke!
He: Hey. Ava dhaan call pannina. What can I do?
She: Call pannina seri. Ivlo neram pesanuma? Kural kaetta udane identify panni irukka vendaam wrong number nu? Panradhayum pannitu ippadi sirikkare. Vekkama illai?
He: Hey. Naan busy aa irundhen. Gavanikkalai. Relax
She: Oh. Appo ayya busy aa irundha, enakkum maththa ponnungalukkum vidhyasam theiryadhu illa?
He: Hey!
She: Saaingalam pesikkaren un kitta. Bye!
He: kovam illai la
She: Naan kova pattu enna aagaradhu. Vakkaren ippo. Bye
(Click)
(Meanwhile the wrong number She calls her He, and narrates the incident)
He starts laughing.
She: Sirikaadha. Maanam poachu
He: He he
She: Ellam unnaala dhaan
He: What? Naan enna pannen?
She: Phone panren sonne la. You forgot. Nee mattum phone panni irundhaa indha madhiri aagi irukaadhu
He: Err. I was about to call you. Manager came here. Pesindu irundhena
She: Edavadhu kadhai sollu. I am feeling very bad. Cha!
He: Come on. Chinna vishayam. Sirichittu vittudanum
She: Unakku ellame chinna vishayam. Inimela naan unakku phone pannave poradhu illai
He: Hey hey. Please please.
She: Evening pesalaam. Seekram vaaa. Late pannadhe. Bye
He: Hey. Are you ok?
She: Not ok nnu sonna enna pannuve, ok nnu sonna pannuve!
He: Err. Ok nu sonna velai continue pannuven. Not ok sonna, innum konja neram pesuven
She: Appo naan not ok aa irundhaa dhaan pesuviya?
He: !!!!!!
She: Ennavo. Seri. Nee velaya paaru. I have a call now. Mudichitu naan aathuku podiuven. Seekram vaa. Bye
He: bye! And sorry!
She: Its ok. Bye

உன் கண்ணில் நீர் வடிந்தால்
He and She watching TV. Technically speaking He watching TV, and She cooking inside
He is watching the Natwest trophy finals of India-England for the 23rd time. She comes out
She: indha vendakkai konjam cut panni koden
He takes the vegetables and knife
She: Evlo thadavai indha match paape
He: Vera edhuvum nanna illaiye
She: Remote enga!
She changes to Sun Music channel. Oru maalai ila veyil neram is coming on tv.
She: Evlo smart aa irukkaan la. He is good
He: Ivan ennatha nalla irukaan. Ghajini la andha memory loss character la he has made a fool of himself.
She: Sanjay Ramasamy character la semma smart aa irundhaan. Adhuvum andha suttum vizhi sudare paatula wow!
He getting all J and starts cutting the vegetable fast
She gets back to the kitchen, and promptly He changes the channel
She shouts from kitchen
She: Channel ennathaku change pannine
He: Nee uLLa dhaane irukke. Adhaan change pannen
She: Adhanaala enna. Paatu kaadhula vizhum illai
He: Cha!
He gets in the kitchen, gives the vendakkai plate and walks out in a huff. He opens the door, takes the mobile and walks out of the house.
He is standing at the gate for a while, watching the dogs playing in the sand. Calls a couple of his friends and gets back inside the house after some 15 minutes.
TV is off. She has finished frying the vendakkai. Rice is on cooker. She is in the bedroom
He: Samachu mudichaacha?
She: hmmm
He: Kaekkaren la?
She: Ippo ennathuku kathara? Paatha theriyaliya? Cooker la sadham vachi irukken. Sambhar curry panni mudichaachu
He: Naan onnum kathalai!
Saying this, he switches on the TV and is watching News. After a while cooker whistle starts coming on. After 2nd or 3rd whistle
He: Cooker kathindu irukku illai. Adha konjam aNachu tholayen!
She walks out of the bedroom pretty fast, switches off the cooker and gets back to the bedroom.
Sensing something wrong, He switches off the TV and goes to the bedroom
He: Enna aachu unakku
She: Onnum illaiye
He: Appuram edhukku inji thinna korangu maari urrr nu irukke?
She starts crying
He: Ippo naan enna solliten nu azhudhu aarpaattam panre?
In between the tears
She: Naan surya smart sonna thappu, nee asin paathu drool panna thappu illai la
He: Err
She: Nee office la irukkara ponnunga paathu sight adippe. And adhayum en kitta vandhu solluve. Aaana naan oru cine star smart aa irukkan sonna thappu
He: Cha! Naan appadi ellam onnum sollaliye
She: Enakku theriyaadha unnai pathi. Vendakai visiri adikaadha kuraya kitchen la poatte. And appadiye kadhava thirandhuttu poite
He: Sorry ma! Naan edho tension la irundhen
She doesn’t say anything and is crying lightly. He comes closer to her, and hugs her. She pushes him away. He hugs her even tightly and kisses her on the cheek. She bursts out crying.
After a while, she wipes her face and goes to the kitchen.
She: Seri saapdlaam vaa
He: Sorry di. Naan appadi panni irukka koodadhu
She: Hmmmm
He: Konja neram kazhichu saapadalaam. Vaa TV paakalam
He changes channel to Sun Music. Guess what song is playing?
Suttum vizhi sudare. And so this He-She episode ends with he having a asattu sirippu on his face, and she having a resigned look!

என் கேள்விக்கென்ன பதில்.(இது எல்லோர் வீட்டிலும் நடந்திருக்கும்)
He and She having dinner.
She: Innum konjam sadham podatumma?
He: Hmmmm
After a couple of minutes
She: What are you thinking?
He: Huh?
She: Enna yosichindu irukke?
He: Onnum illaiye
She: Samayal nanna illaiya?
He: No no. Semma tasty aa irukku
She: Edhu thayir sadham aa?
He: He he. Sambhar curry ellam nanna irundadhu
She: Seri sollu
He: Enna?
She: What were you thinking?
He: Onnum illai ma
She: Veedu eppadi katta porom nu yosikaraya?
He: No no
She: Office la edavadhu tension aa?
He: Not at all
She: Naan edavadhu sollitena?
He, on her shoulder left hand keep
He: Come on!
She: Appo ennaa think pannitu irundhe?
He: Think ellam pannalai nu solren la.
Naalaiku saloon poradha illai next week saloon kku poradha
appadinu contemplate pannindu irundhen
She: !!!!!!!

Monday, November 06, 2006

நீமோவைக் கண்டுபிடித்தல்(finding nemo)

நேற்று டிஸ்னி சேனலில் ரொம்ப நாள் கழித்து மீண்டும் finding nemo பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லன் டீஜெனரஸ்(Ellen DeGeneres) ஒரு சிறந்த நடிகை, ஒரு நாள் டாக் ஷோ நடத்துபவர், தான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை மறைக்காமல் ஓரினச் சேர்க்கயாளர்களின் உரிமைக்கு போராடி வருபவர், அமெரிக்காவில் இன்று இருக்கும் பெண்மணிகளிலேயே மிக சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட இவர் இந்தப் படத்தில் dory என்ற மீனுக்கும் குரல் கொடுத்தவர். இந்தப் படத்தின் உயிர் நாடியே dory என்று தான் நான் சொல்லுவேன். ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் எந்த அளவு ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அந்தக் கதையையே தூக்கி நிலை நிறுத்த முடியும் என்பதை இந்தப் படத்தில் டோரி கதாப்பாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

கதை என்னவென்றால் நீமோ முட்டையாக இருக்கும் பொழுதே அவனுடைய அம்மாவையும் அவனுடைய பிற முட்டை சகோதரர் சகோதரிகளையும் ஒரு சுறாமீன் கொன்று விடுகிறது.

உடனே நீமோ வளர்ந்து அந்த சுறா மீனை பழி வாங்குகிறான். ஹலோ இப்படி எல்லாம் நினைச்சீங்கன்னா நிறைய விஜயகாந்த் படம் பார்க்கறீங்கன்னு அர்த்தம். அதை எல்லாம் மறந்துடுங்க.

இதனால் தன்னுடைய ஒரே உறவான நீமோவை அவனுடைய தந்தை ரொம்ப பாதுகாப்பு உணர்வுடன் வளர்க்கிறார். நீமோவின் ஒரு செதில் வேறு சிறியதாக போய் விடுவதால் அது வேறு நீமோவின் தந்தைக்கு கவலையாகி விடுகிறது.

பாதுகாப்பு உணர்வு அதிகமாகி நீமோவை வெளியிலேயே விடாமல் அவனை பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்குகிறார்.

நீமோவின் பிடிவாதத்தால் அவனைப் பள்ளியில் சேர்க்கிறார் அவன் தந்தை. பள்ளியில் கேலிக்கு ஆளாகும் நீமோ தன்னை நிரூபிப்பதற்காக சென்று ஒருவரின் வலையில் சிக்கி கொள்கிறான். அவர் அந்த மீனை தன் தொட்டியில் வளர்ப்பதற்காக எடுத்துச் சென்று விடுகிறார்.

அங்கு நீமோவின் பள்ளி செயல்களை ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நீமோவின் தந்தை அந்த படகை பின்பற்றி செல்லத் தொடங்குகிறார் ஆனால் படகு வேகமாக சென்று விடுகிறது.

அப்பொழுது அந்தப் பக்கம் வந்த டோரியை ஒரு படகைக் கண்டாயா என்று நீமோவின் தந்தை கேட்க ஆம் இந்தப் பக்கம் சென்றது என்னைப் பின் தொடர் என்று சொல்லி வேகமாக செல்லத் தொடங்கும் டோரி சிறிது தூரம் சென்று மெதுவாக செல்லத் தொடங்குகிறது. நீமோவின் தந்தை ஏன் மெதுவாக செல்கிறாய் என்று கேட்க நீ யார்? என்று கேட்பதில் இருந்து காமெடித் திருவிழா ஆரம்பிக்கிறது.

அப்பொழுது தான் தெரிகிறது டோரிக்கு short term memory loss என்று. கஜினியில் சூர்யாவுக்கு இருந்ததே அதே வியாதிதான். ஆனால் நம்ம சூர்யா மாதிரி சிரியஸான ஆசாமி இல்லை ஜாலியான optimistic மீன்.

அப்பொழுது டோரிக்கு அந்த படகு விட்டுச் சென்ற அடையாளப் பலகையில் இருந்த முகவரியைப் படித்து நீமோவின் தந்தைக்கு சொல்கிறது. அதை விட ஆச்சரியம் அளிக்கும் வகையில் அந்த முகவரி டோரிக்கு ரொம்ப நேரம் ஞாபகம் இருக்கிறது.

அதனால் டோரி நீமோவின் தந்தை அருகில் இருந்தால் தன்னுடைய நிலைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி நீமோவின் தந்தைக்கு உதவி செய்வதற்காக அவருடனே அந்த முகவரி குறிப்பிட்ட சிட்னிக்கு செல்ல ஆரம்பிக்கிறது.

முதலில் டோரியின் கூட வர விரும்பாத நீமோவின் தந்தை வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார். அங்கிருந்து நீமோவைக் கண்டுபிடிக்க செய்யும் பயணம் தான் கதை.

நடுவில் சைவமாக விரும்பும் சுறாக்கள், super cool ஆமைகள் என்று அவர்களின் பயணம் 11/2 மணி நேரம் ஒரு மாஜிக் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

டோரி கதாபாத்திரம் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கள்ளம் கபடமில்லாததால் டோரி அதன் குழந்தைத்தனம், எல்லாமே நல்லது என்று எடுத்துக் கொள்ளும் அதனுடைய பாத்திரம், மனிதன் குழந்தைப் பருவத்தை ஏன் விரும்புகிறான் ஏன் குழந்தைத்தனம் என்பது முக்கியம் என்பதை எல்லாம் நமக்கு சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

உதாரணமாக ஒரு திமிங்கலத்திடம் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பும் டோரி அதனுடன் திமிங்கல பாஷையில் பேசுவதாக சொல்லி சிட்னி செல்வது எப்படி என்று கேட்கிறது.

அந்தத் திமிங்கலம் டோரியையும், நீமோவின் தந்தையையும் விழுங்கி விடுகிறது. நீமோவின் தந்தை டோரியை கடிந்து கொண்டு உனக்கு திமிங்கல பாஷை எல்லாம் தெரியாது என்று திட்டிக் கொண்டிருக்கும் சமயம் அந்தத் திமிங்கலம் அவர்களை சிட்னியில் இறக்கி விடுகிறது.

இது போல டோரியின் பல காட்சிகள் கள்ளம் கபடமற்ற வாழ்க்கையைப் பற்றி ஏங்க வைத்து விடுகிறது.

கடைசியாக இந்தப் படத்தை எடுத்த பிக்ஸர் நிறுவனம் பற்றி சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு நிறைவு பெறாது.

Toy story, Bugs life, Monstors Inc, Incredibles, Cars இதுதான் இந்த நிறுவனம் தயாரித்துள்ள படங்கள் இவைகளைப் பார்த்திருந்தால் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

இதுவரை ஒரு படம் கூட பிளாப் ஆகாமல் சூப்பர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம். உங்களுக்கு கார்ட்டூன் பிடிக்கும் என்றால் மேலே உள்ள எல்லாப் படங்களையும் கட்டாயாம் பார்த்தே ஆக வேண்டும்.

டிஸ்னி நிறுவனம் பிக்ஸாரின் ஷேர்களை ரெக்கார்ட் விலையில் வாங்கி உள்ளது. இது பிக்ஸாரை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதே தரத்துடன் படங்கள் வர வேண்டும் என்பது என் போன்ற சினிமா ரசிகனின் ஆசை.

Wednesday, November 01, 2006

வெளிநாட்டுப் போலிப் பாதிரியார்கள்

இதில் அதிர்ச்சியூட்டிய செய்தி என்னவென்றால் இன்னும் சிலர் தேவாலயங்களில் வேலை செய்கிறார்கள்.

Church admits 100 priests sexually abused children
SHAWN POGATCHNIK IN DUBLIN

MORE than 100 Catholic priests in the archdiocese of Dublin are alleged to have sexually abused at least 350 children, according to a report released yesterday.

The number of alleged offences in the report released by the archdiocese is the biggest such admission of child abuse by priests in Ireland to date.

The alleged offences took place over the past 66 years and the report follows a detailed examination of parish records.

The Catholic Church in Ireland has been rocked by waves of such allegations against priests since the mid 1990s.

A government commission to look at the history and handling of abuse by priests throughout Ireland is to be set up later this month.

Archbishop Diarmuid Martin, a veteran Vatican diplomat, said the diocese would have to sell off some of its property to pay victims' compensation claims. The archbishop, appointed in 2003, said such an action would be "a necessary sacrifice to put right past wrongs, as much as was possible".

"It's very frightening for me to see that in some of these cases, so many children were abused," he said

"On the other hand, I know that the vast majority of priests don't abuse, that they do good work, that they're extremely upset and offended by what's happened."

The report, which looked at cases of alleged abuse dating back to 1940 in the Dublin area, found that 102 priests - about 3.5 per cent - had allegedly been involved in the sexual or physical abuse of children.

The office said the numbers were based on a two-year review of the personnel files of more than 2,800 priests who had worked in the Dublin archdiocese, either as parish priests or in religious orders, over the past 66 years.

According to the report, eight Dublin-assigned priests have received criminal convictions for abuse charges, while 32 priests have been sued for damages by 105 victims at a cost to the archdiocese of £5.8 million, including legal fees.

But it said costs were expected to rise much higher, as 40 cases remained unsettled. Church authorities have positively identified 350 abuse victims, and a possible further 40 people who may have been abused have still to be traced.

Last October, Seamus Hegarty, the bishop of Derry, revealed that about 40 child sex abuse allegations have been made against 26 priests in the Derry diocese over the last 50 years.

Up to 13 of those priests are still working in the Church.

http://news. scotsman. com/topics. cfm?tid=305&id=353912006

Thursday, October 12, 2006

lost

மூன்றாவது சீசன் தொடங்கி உள்ள நிலையில் இது ஒரு மீள் பதிவு.

Lost

ஸ்டார் மூவீஸ் தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்படும் தொடர்

Lost - தொலைந்தவர்கள்

ஒரு மர்மமான தீவு

ஒரு விமான விபத்து

அதில் உயிர் தப்பிய 45 நபர்கள்

இப்படி தொடங்கிய தொடர் இது வரை வந்துள்ள தொடர்களுல் மிகச் சிறந்த சஸ்பென்ஸ் தொடர் என்று கூறினால் மிகையாகாது.

இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் இந்த கதையின் கதாபாத்திரங்கள்தான்.

பயணம் செய்யும் நேரம் நாம் அருகில் உள்ள நபர் நல்லவரா? கெட்டவரா? குற்றவாளியா? நாத்திகரா? போதை மருந்து பழக்கம் உள்ளவரா என்று கவலையுறத் தேவை இல்லை. ஆனால் நாம் பயணம் செய்த விமானம் காற்று அழுத்தத்தில் சிக்கி பயணம் செய்ய வேண்டிய பாதையில் இருந்து விலகி 1000 மைல் தள்ளிச் சென்று விபத்துக்குள்ளாகும் பொழுது, அதுவும் ஒரு அனுமாஷ்யமான தீவில் சென்று விபத்துக்குள்ளாகும் பொழுது இது முக்கியமாகி விடுகிறது.

ஆகவே இந்த தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் முன் கதை அதாவது இந்த விபத்து நடக்கும் முன் அந்த கதாபாத்திரம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது தீவில் நடக்கும் சம்பவங்களிடையே காண்பிக்கப் படுகிறது.

இந்த தொடரின் ஆரம்பம் விமான விபத்தில் ஆரம்பிக்கிறது.
ஜாக் கண் விழிக்கிறான் அவன் முன் கரும் புகை எழும்புகிறது.எழுந்தால் விமானம் விபத்துக்குள்ளாகி கிடக்கிறது.ஜாக் டாக்டர் ஆகையால் விபத்துக்குள்ளாகி இருக்கும் அனைவருக்கும் உதவி செய்கிறான், அப்பொழுது விமானத்தில் இருக்கும் எரிவாயு தீப் பற்றி மீதம் உள்ள பகுதி வெடித்து சிதறுகிறது.

இப்படி பரபரப்பாக ஆரம்பிக்கும் தொடரில் சீக்கரமே ஒரு அனுமாஷ்யமும் கலக்க ஆரம்பிக்கிறது.

வெளி உலகை தொடர்பு கொள்ள ரேடியோவைத் தேடி சென்ற இடத்தில் விமான ஓட்டுனர் ஒரு அனுமாஷ்யமான முறையில் கொல்லப் படுகிறார்.
பிறகு அந்த விமானத்தில் வந்த ஒவ்வொரு கதா பாத்திரமும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.

டாக்டர் ஜாக், கைதி கேட், போதை பழக்கத்திற்கு அடிமையான சார்லி, இராக் போராளி சையித், ஏமாற்றி பணம் பறிக்கும் சாயர், ஆங்கிலம் பேச முடியாத கொரியன் தம்பதி ஜின் சன், நிறை மாத கர்ப்பிணியான கிளைர், மத நம்பிக்கை கொண்ட லாக், 150 மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான கர்லி போன்றவர் அறிமுகம் ஆகிறார்கள்.

இவர்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் நாம் அறியும் பின்புலன்கள் நம்மை மேலும் மேலும் சஸ்பென்ஸின் உச்சிகே கொண்டு செல்ல தொடங்குகிறது.


உதாரணமாக நாம் லாக் பக்க வாதம் வந்து சக்கர நாற்காலியில் இருந்தவர், விபத்தின் பொழுது இந்த தீவுதான் அவரை குணப்படுத்தியது என்று நம்புகிறார்.

கிளைரை இந்த விமானம் விபத்துக்குள்ளாக போகிறது என்பதை அறிந்த ஒரு ஜோதிடர் இந்த விபத்தில் சிக்க வேண்டும் என்று திட்டமிட்டே இந்த விமானத்தில் பயணம் செய்யச் சொன்னார் என்று அறிகிறோம். ஏன் விபத்து நடக்கும் என்று தெரிந்தே நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை விமானத்தில் செல்லச் சொன்னார் என்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்த தொடரில் கதை அமைப்பு, கதாபாத்திரம் ஆகியவற்றோடு வசனங்களும் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக லாக் சார்லியிடம் ஒரு பட்டாம் பூச்சியைக் காட்டி "இந்தப் பூச்சி பல நாட்கள் மிகவும் சிரமப்பட்டு தன்னுடய ககூனில் இருந்து வெளியே வரும். நான் இந்த பூச்சிக்கு உதவி செய்வதாக நினைத்து இந்த கத்தியால் இந்த ககூனில் ஒரு கீறல் இடலாம். ஆனால் அப்படிச் செய்தால் வெளியே வரும் பட்டாம் பூச்சி பலவீனமாகிவிடும், அதனால் உயிர் வாழ இயலாது. இயற்கை அது போலத் தான் அனைவருக்கும் போராட்டம் மூலம் பலம் அளிக்கிறது" கூறும் வசனத்தைக் கூறலாம்.

இந்த தொடரின் சென்ற ஆண்டு கோல்டன் குளோப் விருது பெற்றது என்பதும் கூறிப்பிடத்தக்கது.

இந்த தொடரை பற்றி மேலும் எழுத திட்டமிட்டுள்ளேன்.

Wednesday, September 20, 2006

கோபி அன்னானின் கடைசிப் பேச்சு

The Middle East is the key, says Annan in tearful goodbye
By Sam Knight and agencies

Peace in Iraq, Afghanistan and across the world will depend on the ability of the United Nations to resolve the Arab-Israeli conflict in the Middle East, Kofi Annan said today at the opening of the General Assembly in New York.

Mr Annan, who is nearing the end of his second five-year term as the UN Secretary General, used his last address to the assembled heads of state to identify the ongoing dispute between Israel and the Palestinians as the world's key war zone.

"No other conflict carries such a powerful symbolic and emotional charge among people far removed from the battlefield," he said.

"As long as the Palestinians live under occupation, exposed to daily frustration and humiliation; and as long as Israelis are blown up in buses or in dance-halls: so long will passions everywhere be inflamed."

Mr Annan, 68, said that as long as the UN Security Council failed to end the 60-year dispute "so long will our best efforts to resolve other conflicts be resisted, including those in Iraq and Afghanistan, whose peoples need our help just as badly, are entitled to it".

Mr Annan singled out the Middle East as the heart of the world's security problems after a summer of violence, which saw the kidnapping of an Israeli soldier by Palestinian militants spark a regional war in which more than 1,000 Lebanese civilians were killed, 200 Palestinians lost their lives and nearly 150 Israeli people died in a stream of missile attacks.

His message came ahead of a meeting with the "Quartet" of America, Russia, the EU and the UN tonight to discuss the crisis.

Hopes were raised earlier today when the Israeli Foreign Minister, Tzipi Livni, met the Palestinian President, Mahmoud Abbas, to discuss the possible resumption of peace talks after the formation of a Palestinian government of national unity.

An emotional Mr Annan raised the General Assembly to its feet at the end of his speech, in which he also called on the world to intervene in Darfur, the region of western Sudan afflicted by famine and genocide.

"Sadly, once again the biggest challenge comes from Africa - from Darfur, where the continued spectacle of men, women and children driven from their homes by murder, rape and the burning of their villages makes a mockery of our claim, as an international community, to shield from the worst abuses," he said.

Mr Annan is expected to use this week's three-day meeting of the General Assembly to heap pressure on the Sudanese President, Omar al-Beshir, to accept the deployment of up to 20,000 UN peacekeepers in Darfur, a mission vigorously opposed by the Sudanese Government, which is accused of complicity in the killing of up to 300,000 people.

The UN Security Council approved a peacekeeping mission in Darfur last month to take over from the poorly equipped and thinly spread African Union force that has attempted to police the region for the last three years. Sudan has said it will replace the AU soldiers with its own military forces.

Looking back on his ten years as Secretary General, Mr Annan said: "Together we have pushed some big rocks to the top of the mountain, even if others have slipped from our grasp and rolled back."

But he said remained filled with an "obstinate feeling for hope for our common future" after a recent visit to the Middle East.

Thursday, September 07, 2006

Lage raho munnabhai

முன்னாபாய் எம்.பீ.பீ.எஸ். இந்திய சினிமா உலகில் ஒரு திருப்புமுனையான படம். அந்த டீமில் இருந்த பல பேர் இணைந்து கொடுத்திருக்கும் படம் தான் Lage Raho Munnabhai.

ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை ஒரு cult status அடைந்த படத்திற்கு sequel கொடுப்பது எளிதல்ல. அந்த படத்தின் எந்த அம்சங்களை இணைப்பது எந்த அம்சங்களை விடுவது என்பதை எல்லாம் முடிவு செய்து ஒரு படம் தருவதும் எளிதல்ல. இருந்தாலும் இந்த டைரக்டர் அதனை மிக அருமையாக செய்திருக்கிறார். "jaadu ki jappi" போன்ற விஷயங்களை முற்றிலுமாக விட்டு விட்டு இந்தப் படத்தை எடுத்ததற்க்காவே டைரக்டருக்கு ஒரு ஷொட்டு.

இன்று நாம் வாழும் உலகில் மஹாத்மா காந்தியின் தத்துவங்கள் முன்பு எப்போதும் இருந்ததை விட அதிகமாக தேவைப்படுகிறது. வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்பதையும் இன்றைய உலகிலும் காந்திய தத்துவங்களை பல இடத்தில் நம்மால் உபயோக்கிக்க முடியும் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் டைரக்டர்.

அதற்காக இது எதோ சீரியஸ் படம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆரம்பம் முதல் கடைசி வரை முன்னாவும் சர்க்கியூட்டும் செய்யும் காமெடி கலாட்டா தான் படம். அதில் மிக அருமையாக காந்தியக் கொள்கைகளை சொல்லி இருப்பது டைரக்டரின் திறமை.

காந்தியின் ஆத்மாவிடம் கேள்வி ஒன்று கேட்கப் படுகிறது "என் வீட்டின் பக்கத்தில் ஒரு சிறுவன் உங்களுடைய சிலையின் ஒரு கையை உடைத்து விட்டான் அவனை என்ன செய்வது?"

இதற்கு காந்தி "அந்த சிறுவன் கையில் இன்னொரு கல் கொடுத்து என் சிலை முழுவதையும் உடைத்து விட சொல்லுங்கள். நாட்டில் எனக்கு வைக்கப் பட்டிருக்கும் எல்லா சிலைகளையும் உடைத்து விடுங்கள். எனக்கு அங்கீகாரம் செயவதாக இருந்தால் என் கருத்துக்களை மனதில் கொள்ளுங்கள். என் படத்தை ஆபிஸில் மாட்டிக் கொண்டு அதே இடத்தில் லஞ்சம் வாங்குவதால் என்ன பயன்? என் கருத்துக்களை மனதில் வையுங்கள் என் படம் எல்லாம் தேவையில்லை." என்று கூறுவதாக அமைந்திருக்கிறது ஒரு காட்சி.

காந்தி உயிருடன் இருந்திருந்தால் இதையே தான் கூறியுருப்பார் என்றே எண்ணுகிறேன். மேலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் காந்தி என்ற மனிதரா முக்கியம் அவர் என்ன அஹிம்சை, அன்பு வழி எல்லாம் முதல் முதலாக போதித்தவரா என்ன? இல்லையே காந்தி என்ற மனிதரிடம் குறைகள் உண்டு ஆனால் அவர் போதித்த அஹிம்சையில், அன்பு வழியில் குறைகள் இல்லையே அதனால் காந்தி என்ற மனிதரை விடுத்து அஹிம்சை அன்பு செலுத்துவதில் தவறில்லையே என்பதாக எனக்கு இந்தக் காட்சி பட்டது.

இந்த படத்தில் முன்னா, சர்க்கியூட்டாக சஞ்சய் தத்தும் அர்ஷத் வார்ஸி வாழ்ந்திருக்கிறார்கள். brilliant performance.

வித்யா பாலனுக்கு அதிகமாக நடிக்க வாய்பில்லை என்றாலும் அவருக்கு ஒரு onscreen presence இருக்கிறது ஒரு charisma இருக்கிறது. ரொம்ப அழகாக இருக்கிறார்.

போமன் ஈரானி மற்றுமொரு solid performance.

மியூசிக் மட்டும் avarage தான். ஆனால் படத்துடன் ஒட்டி இருப்பதால் நன்றாக இருக்கிறது.

rediffல் 4.5/5 ஸ்டார் கொடுத்து ஆஸ்காருக்கு அனுப்புங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்(ஓம்காராவிற்கே 3 தான் கிடைத்தது என்று நினைக்கிறேன்).

நான் 5/5 கொடுக்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ஒரு முறை மட்டும் அல்ல.

Thursday, July 27, 2006

நன்றிகளும் வாழ்த்துக்களும்

நன்றிகளும் வாழ்த்துக்களும்

வாக்களித்த பெருமக்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

அதிக வோட்டுக்களை வாங்கிக் குமித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நான் மூன்று பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்திருந்தாலும் எனக்கு அதில் பிடித்த ஒன்றை கீழே கொடுத்திருக்கிறேன்.(நானெல்லாம் இப்படி மீள்பதிவு போட்டாத்தான் உண்டு).

மரணம் பற்றி சிந்திக்கும் சமயமெல்லாம்

மரணம் நிரந்தரப் பிரிவென்று வருந்துபவரே
நிரந்தரமில்லா உலகை பிரிவதெப்படி நிரந்தரமாகும்?

என்று கேட்கத் தோன்றுகிறது

மரணம் என்பது
சோகமா? நம்மவர்களைப் பிரிப்பதால் வருத்தமா? இல்லை புரியாததைப் பற்றிய பயமா?

இல்லை அப்பா மரணம்

ஆராய்ந்து உணர்ந்தறிய முடியாத ஞானம்
ஞானமனைத்தும் விளக்க இயலாத கேள்வி
அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் விளங்காத புதிர்
பயத்தால் உயிர் வழிநடத்தும் கர்மா

கர்மாவென்று சொல்வது சரியா?

உயிர்கள் இயங்குவது கூட்டை காக்கத்தானே
உயிரைப் பேணத்தானே உலகின் தொழிலெல்லாம்
மரணம்தானே அதிகபட்ச தண்டனை இவ்வுலகில்
ஆக இயக்கமனைத்திற்கும் அடிப்படை மரணமே!!!

ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ம்ம் ஹா மாட்டிக் கொண்டீர்.. தோற்றுவித்தலுக்கு மரணம் எப்படி காரணியாக்குவீர்?

கேளப்பா

தன்னெச்சம் இவ்வுலகில் மிச்சம் வைக்கவே
தோற்றுவிக்கிறான் இதிலடக்கம் கலையும் குழந்தையும்
அவரவரெச்சமே மிச்சமிருப்பின் தோற்றுவித்தல் எதற்காக
உயிருக்கு மரணமில்லையெனில் பிறப்பு எதற்காக

தோற்றுவிக்கிறது, வழி நடத்துகிறது மரணம் கடவுளா?

மரணமே முதல் பயம் மண்ணுயிர்கெல்லாம்
இறையை உணர்ந்தது அப்பயத்தை ஆராய்ந்துதான்
இறை நானேயென்றிருப்பானே மரணம் நீக்கினால்
இறையைத் தேடியிருப்பானா மரணத்தை மனிதனறிந்தால்?

Monday, July 17, 2006

ஐம்பது பதிவுகள்

என்னடா எல்லாம் ஆயிரத்தை நோக்கி போயிட்டு இருக்காங்க ஐம்பதுக்காக ஒரு பதிவான்னு எல்லாம் நீங்க நினைக்கலாம். அதாவது ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பக்கம்ன்னு வைச்சுகிட்டா ஐம்பது பக்கங்கள் நான் தமிழ்ல எழுதியிருக்கேன் என்று நினைக்கும் பொழுது நிஜமாலுமே எனக்கு சந்தோசமா இருந்தது அதனால்தான் சரி நாம சந்தோசத்தை வெளிப்படுத்திடுவோம்ன்னு ஒரு பதிவு. அப்படியே நான் எழுதுனது இது இதை பத்தி அப்படின்னு ஒரு ஓஸி விளம்பரமும் பண்ணிக்கலாமே.

முதலில்

நன்றி கூறும் படலம்

தமிழ்மணத்துக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழ்மணம் இல்லையென்றால் கண்டிப்பாக தமிழர் பலருக்குள் இயற்க்கையாகவே உள்ள தமிழார்வம் போல் என்னுள்ளும் இருக்கும் தமிழார்வத்திற்கு தீனி போட்டிருக்க முடியாது. நானெல்லாம் தமிழில் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். அதற்காக தமிழ் மணத்துக்கு நன்றிகள்.

நான் எழுதற எழுத்து எல்லாம் சும்மா எழுத வேண்டுமே என்ற ஆர்வத்திற்காக எழுதுவது. மத்தபடி கதை எழுதணும் கவிதை எழுதணும் அப்படின்னெல்லாம் நினைத்ததே இல்லை. எதோ கிறுக்கறதுக்கு கவிதை, கதை என்று தமிழ் மணத்திலிருப்பவர்கள் கோபித்து கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் எழுதறதுக்கு பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை(எதோ சுமாரா இருந்தாலாவது எதிர்பார்க்கலாம்). இருந்தாலும் பின்னூட்டம் வர வேண்டும் என்ற ஆசை உண்டு. இப்படி இருக்கும் பொழுது என் பதிவுகளையும் படித்துவிட்டு எதோ சுமாரா எழுதறான் இவனை ஊக்குவிப்போம் என்ற எண்ணத்தில் பின்னூட்டம் இட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் சக வலைப் பதிவாளர்கள் அனைவருக்கும். இன்ஸ்பிரேசன் என்பது இரு வகைகளில் வரும். எப்படி எழுதறான் பாரு இதை மாதிரி நாமும் எழுதலாம் என்று, இவனெல்லாம் எழுதறான் நானும் எழுதலாம் என்று. இங்குள்ள வலைப் பதிவாளர்கள் அனைவருமே எனக்கு முதல் வகையில் இன்ஸ்பிரேசன் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். நான் பலருக்கு பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைத்து இட்டதில்லை அவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது நீங்க எல்லாரும் அருமையாக எழுதுகிறீகள் என்று உங்கள் அனைவரின் எழுத்துக்களும்தான் என்னுடைய பூஸ்ட்.

தவறுகளுக்கு வருந்துதல்

எனக்கு வாழ்க்கையில பெரிய கொளுகை எல்லாம் கிடையாது. எந்த மனிதனுக்கும் மனதாலும் துன்பம் தராதே என்ற ஒன்று மட்டுமே கொள்கை. அதையும் சரியா பின்பற்றுவது இல்லை. சில இடக் கூடாத பின்னூட்டங்கள். சில சொல்ல கூடாத கருத்துக்கள் என்னிடம் இருந்து வந்திருக்கிறது அது அனைத்தும் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய பதிவுகளில் எனக்கு பிடித்தது

விளம்பரம் என்றெல்லாம் நினைக்காதீங்க ஐம்பது பதிவு எழுதீட்டமேன்னு ஒரு சந்தோசத்துள முன்னாடி எழுதினது எல்லாம் எடுத்துப் பார்த்தேன். அதுல பிடித்திருந்தது கீழே.

1. உதட்டோரப் சிரிப்பழகு

எதோ என் கிறுக்கல்களிலேயே ஒரு சுமாரான கிறுக்கல் என்பது என் எண்ணம்.

2. யோசித்து பார்க்கிறேன் காதல் என்னவென்று

முதல் கிறுக்கல் அதனால்


3. எண்ணமாறு

ஏனோ தெரியல இந்த ஆறு விளையாட்டில் நான் எழுதுனது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நன்றிகள் அனைவருக்கும்.

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்.

Thursday, July 13, 2006

வலைப் பதிவாளர்களுக்கு சில குரல்(றள்)கள்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலான் ஆகப் பெறின்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

Friday, June 30, 2006

வலைப் பதிவாளர்களுக்கு இன்னும் சில குரல்(றள்)கள்

நான் ஒரு வலைப் பதிவாளருக்கு வெளியிட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை. காலையில் வெளியிட்டது. அது வெளியானாலும் வெளியாகாவிட்டாலும் கவலையில்லை அவருக்காக சில குரல்(றள்)கள்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

நடு நிலைமை தவறியதால் நமக்கு பலன் கிடைக்கும் என்றாலும் நாம் நடு நிலைமை வழுவக் கூடாது.(விளக்கம் சரி என்றுதான் நினைக்கிறேன் தெரிந்தவர்கள் கூறவும்).

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி-இருப்பக் காய் கவர்ந்தற்று

Wednesday, June 28, 2006

வலைப் பதிவாளர்களுக்கு ஒரு குரல்(றள்)

இன்னா செய்தாரே ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செயது விடல்

பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர் தெய்வப் புலவர் என்று அறியப் படுவதில் ஆச்சர்யம் இல்லை. காலத்தை வென்று விட்டது குறள் என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை. இன்று நம் வலைப் பதிவாளர்களுக்காக கூட குறளை விட்டுச் சென்றிருக்கிறாரே.

ஒரு விவாததில் எனக்கு பிடித்த வலை பதிவாளர் ஒருவர் என்னிடம் ஒருவருடைய பதிவுகளுக்கு எப்படி வேண்டுமானாலும் பதில் சொல்லலாம் என்று எனக்கு பதிலளித்துள்ளார். அவருக்கு இந்த இடுகை சமர்ப்பணம்.

என் ஆன்மீக குரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் சில சிந்தனைகளோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...

பிறருக்கு மனதாலும் துன்பம் நினையாதே.

குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.

துன்பம் போக்கும் தூயநெறியே அன்பாம். அறமாம் அறிவின் உயர்வாகும்.

உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள், உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.

Saturday, June 24, 2006

ரசித்த நாவல் பொன்னியின் செல்வன் - 2

நான் ரசித்த மேலும் சில வர்ணணைகள்

"கிழக்கே வான் முகட்டில் சூரியன் உதயமாகி கொண்டிருந்தான். அங்கே கடலை உருக்கி விட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதய குமாரி தங்க பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீல்ப் பட்டாடை போர்த்துக் கொண்டு விளங்கியது. வலப் புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வருண பூமிப் பிரதேசம் காணப்பட்டது. அது நான் புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாப்பித்துள்ள பூமிப் பிரதேசமா என்று தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பச்சைத் தீவுகள் பச்சை நிறத்தின் பல வேறு கலவைகளுக்கு உதாரணமாக தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலு புறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழு வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்த காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஒவியக் கலையில் தேர்ந்த அமரக் கலைஞன் ஒருவன் "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது."

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டுவதற்கு ராஜராஜனுக்கு எப்படி தோன்றியிருக்க வேண்டும் என்று கூறிப்பிடும் இடமும் சொல்லியாக வேண்டும்.

"அக்கா! ஒரு செய்தி! இலங்கை சிறிய ராஜ்ஜியமாக இருந்தாலும் அந்த ராஜ்ஜியத்தை முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் மகாபுருஷர்கள்; பெரிய உள்ளங்களைப் படைத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய திட்டங்களைப் போட்டு பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள். செங்கல்களைக் கொண்டு மலை போன்ற மேக மண்டலத்தை அளாவிய புத்த ஸ்தூபங்களை நிர்மாணித்தார்கள். ஆயிரம், இரண்டாயிரம் அறைகள் உள்ல மண்டபங்களை எழுப்பினார்கள். புத்த பகவான் எவ்வளவு பெரியவர் என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் படியாக,அதோ அந்த தென்னை மர உயரமுள்ள புத்தர் சிலைகளை அமைத்தார்கள். அக்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்ரகத்தைப் பார். எவ்வளவு சின்னஞ் சிறியதாய் இருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்த பூத கணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வள்வு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதோ பார் அக்கா! இதோ என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து வளர்ந்து வளர்ந்து பெரியதாகிறது.பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூறை இப்பொழுது போய்விட்டது. நந்தி பகவான் வானமளாவி நிற்கிறார். பூத கணங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனை தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள். நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தட்சிண மேரு என்று அழைக்கும்படியாக வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்கு தக்கபடி பிரகாரங்கள அமைய வேண்டாமா?"

பொன்னியின் செல்வர் தன் அக்காவிடம் சொல்லுவார், "வந்தியத்தேவன் செய்த தந்திர மந்திரங்களையும், கை கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும் நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யமளிக்கிறது". பொன்னியின் செல்வர் மட்டும் அல்ல இந்த புத்தகத்தைப் படிக்கும் அனைவருக்குமே வந்தியத்தேவனின் தந்திரங்களும், வித்தைகளும் ஆனந்தத்தையும் வியப்பையும் அளிக்கும்.

இந்த நாவலின் மூலம் பண்டைக்கால சோழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்க்கை என்று பல தகவல்கள் அறியக் கிடைக்கின்றன.

இந்த நாவலில் மற்றொரு சிறப்பம்சம் அந்த காலகட்டத்தில் மக்கள் மத நம்பிக்கைகள், வழக்கில் இருந்த மதங்களை நமக்கு காட்டியிருப்பது. அன்றும் மக்கள் மதத்தின் பெயரால் பிரிந்தே கிடந்தார்கள் என்பதை நாவல் முழுவதும் வரும் சைவ - வைணவ சண்டைகள் மூலம் நமக்கு காண்பிக்கிறார். "அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவர் வாயில் மண்ணு" போன்ற வசனங்கள் ஆங்காங்கே காணலாம். இன்றும் அது போல "கிறிஸ்துவும், முகமது நபிகளும், கிருஷ்ணரும் ஒண்ணு அதை அறியாதவர் வாயில் மண்ணு" என்று சொல்ல ஒருவர் இருப்பின் நன்றாகத்தான் இருக்கும்.

கதைக் கலன் அரசியல் சார்ந்தது என்பதால் சஸ்பென்ஸ், விறுவிறுப்புக்கு குறைச்சலே இல்லை இந்த நாவலில். இந்த நாவல் முதன் முதலாக தொடர் கதையாக வந்த சமயம் அந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தெரிந்து கொள்ளும் ஆவலை எப்படி அடக்கி கொண்டிருப்பார்கள் என்று நினைத்து கொள்கிறேன் இப்பொழுது.

வந்தியத்தேவன், நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியன் நம்பி போன்ற பாத்திரங்கள் தமிழ் உள்ளவரை வாழ்ந்து வரும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.

இந்த நாவலில் நாவல் படித்து முடித்த பின்னரும் நமக்கு சில விசயங்கள் தெளிவாக்காமல் விட்டிருப்பதன் மூலம் சரித்திரத்தின் குழப்பமான அந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்பதை நம் கற்பனைக்கே விடுகிறார் கதாசிரியர்.

ஒரு சிறிய கல்வெட்டுச் செய்தி சோழ நாட்டில் பாண்டிய நாட்டு ஆபத்துதிவகளால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்று அந்த செயதியை ஒரு காவியமாக தருவதற்கு ஒரு ஜீனியஸால்தான் முடியும்.

நான் எங்கோ படித்த ஞாபகம் யாரோ ஒருவர் கல்கி அவர்களின் உடலில் வந்தியத்தேவனின் ஆவி புகுந்து அவரை இந்த நாவல் எழுத வைத்ததாக கூறியிருந்தார்கள். அவர் அப்படிக் கூறக் காரணம் அந்தக் கால கட்ட நிகழ்வுகளை நாம் நேரிலேயே காண்பது போல ஒரு எண்ணம் நமக்கு நாவல் படிக்க படிக்க உண்டாவதுதான். எனக்கு ஆவி என்பதில் நம்பிக்கைகள் எல்லாம் இல்லை. இருப்பினும் எனக்கு அவர் சொன்னதைப் படித்து இருக்குமோ என்று தோன்ற வைத்தது நாவலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.

Tuesday, June 20, 2006

பொன்னியின் செல்வன்

முஸ்லீம் ஒருவருக்கு ஹஜ் பயணம் எப்படி வாழ்க்கையில் முக்கியமானதோ, ஹிந்துக்களுக்கு காசி, ராமேஸ்வரம் செல்வது எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவு முக்கியமானது, தமிழ் மொழி ஈடுபாடு கொண்டுள்ளவர் பொன்னியின் செல்வனில் வந்தயத்தேவனுடன் பயணிப்பது.

"ஆதி அந்தமில்லாத கால் வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பயணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்."

என்று ஆரம்பிக்கும் கல்கி அவர்கள் நம்மை எழுத்துலகின் அற்புதமான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

வந்தியத்தேவன் கதாப்பாத்திர படைப்பிற்காக மட்டுமே படைப்புலகின் அனைத்து பரிசுகளும் கல்கி அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். வந்தியத்தேவனைப் போல் ஒரு வீரமான, விவேகமான, நகைச்சுவையான, காதல் ரசனை கொண்ட கதாப்பாத்திரம் இன்று வரை இலக்கிய உலகில் படைக்கப்படவில்லை என்பது என் கருத்து. வந்தியத்தேவனை விட வீரமான கதாப்பாத்திரங்களைக் காணலாம், விவேகமான கதாபாத்திரங்களைக் காணலாம் ஆனால் எல்லாக் குணங்களும் தன்னுள் சரி விகிதத்தில் கொண்ட பாத்திரங்களை காணவே இயலாது.

வந்தியத்தேவனுக்கடுத்து நந்தினியின் கதாப்பாத்திரத்தையும் மிக அற்புதமாக அமைத்திருப்பார் கல்கி அவர்கள். பெண் நினைத்தால் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தையே நிலைகுலையச் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினாலும் என்னால் நந்தினியின் பாத்திரத்தை வெறுக்கவே இயலவில்லை புத்தகம் படித்த பலரும் என் போலவே எண்ணியிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஒரு பச்சாதாபம் மட்டுமே கடைசி வரை நந்தினியின் மேல் வரச் செய்தது கல்கி அவர்களின் கதாபாத்திரம் வடிவமைக்கும் திறனுக்கு மிக சிறந்த சான்று.

குந்தவை, ஆழ்வார்க்கடியன் நம்பி, பூங்குழலி போன்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே வடிவமைக்கப்பட்ட விதத்தில் நாம் ஒரு அறிவுஜீவியின் வேலைத் திறனைக் காணலாம்.

பாத்திரப் படைப்பைப் போலவே வர்ணணைகளும் மிக அற்புதமாக அமைக்கப் பட்டிருக்கும்.

நான் ரசித்த சில வர்ணணைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

"நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தாள். நந்தினியின் பொன்முகம் பூரணச் சந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கரு நீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தங்தத்தால் செய்ததுபோல் திகழ்ந்தது; குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டுப் போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செம்பைப்போல் தோன்றியது.குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டென திகழ்ந்தது."

குந்தவை தன் காதலை வந்தயத்தேவனிடம் தெரிவித்து அவன் அபாயகரமான காரியங்களுக்கு செல்லும் சமயம் கவனமாக இருக்க சொல்கிறாள் அதற்கு வந்தியத்தேவன்.

"தேவி! அப்படி ஒன்றும் எனக்கு நேராது. நான் இன்று அமுதுண்டு அமரனாகி விட்டேனே! எனக்கு இனி மரணம் இல்லை! கன இருள் சூழ்ந்த வனாந்தரங்களில் காற்றும் மழையும் கடுகிப் பெய்து நான் திசை தெரியாமல் தடுமாறும் சமயங்களில் தாங்கள் அந்த காட்டு மத்தியில் உள்ள வீட்டில் பலகணிக்கு அருகில் விளக்கேற்றி வைத்துக் கொண்டு எனக்காக காத்திருப்பீர்கள். அந்த நினைவு எனக்கு தைரியம் அளித்து காற்று, மழை கனாந்தரங்களிலிருந்து தப்புவதற்கு துணை செய்யும்.அலை கடலின் நடுவில் மரக்கலத்தில் ஏறி நாளும் வாரமும் மாதமும் கணக்கு மறந்து திக்குத் தெரியாமல் மதி மயங்கி கதி கலங்கி நிற்கும் பொழுது, ஸப்தரிஷி மண்டலத்தின் அடியில் என்றும் நிலைத்தி நின்று சுடர் விட்டு வழி காட்டும் துருவ நட்சத்திரமாகத் தாங்கள் ஒளி வீசுவீர்கள். நான் திசை அறிந்து என் மரக் கலத்தை திருப்பிக் கொண்டு வருவேன். கடற்கரை ஒரத்து பாறைகளில் மாமலைகள் போன்ற பேரலைகள் தாக்கிக் கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கிலிருந்து வரும் உய்ர் காக்கும் ஒளியாக தாங்கள் பிரகாசிப்பீர்கள்.அந்தப் பிரகாசத்தைக் கொண்டு என் படகு பாறையில் மோதாமல் கரையில் கொண்டு வந்து சேர்ப்பேன். புல்லும் பூண்டும் முளைக்காத அகண்டமான பாலைவனப் பிரதேசத்தில் வடவைக் கனல் எனக் கொளுத்தும் வெய்யிலில் அனல் பிழம்பெனச் சுட்டுப் பொசுக்கும் மணலில் நான் தாகத்தால் நா உலர்ந்து வியர்வைக் கால்கள் வறண்டு தவித்துத் தத்தளிக்கும் நேரங்களில் தென்னை மரமும் தேன் கதலிகளும் சூழ்ந்த ஜீவ நதி ஊற்றாக தாங்கள் எனக்கு உதவுவீர்கள் தேவி!இந்தப் விரிந்து பரந்த உலகத்தில் நான் எங்கே போனாலும் எத்தனை கஷ்டங்களுக்கு உட்பட்டாலும் ஒரு நாள் கட்டாயம் திரும்பி வருவேன். திரும்பி வந்து தங்களைக் கரம் பிடித்து மணந்து கொள்வேன். இந்த மனோரதம் நிறைவேறும் வரை எமன் என்னை நெருங்க மாட்டான், அமுதுண்டு அமரனாக இருப்பேன்."

தொடரும்

Monday, May 29, 2006

சுப்ரீம் கோர்ட் கோரிக்கையும் என்னுடைய கருத்துக்களும்

சுப்ரீம் கோர்ட் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடி வரும் மாணவர்களுக்கு போராட்டத்தை கைவிட சொல்லி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அரசு எடுத்த முடிவை பரிசீலனை செய்ய வழியுறுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு பற்றி பலர் பல கருத்துக்களை சொல்லிவிட்டதால் நான் மேலும் அதனைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

எனக்குள் இருக்கும் கேள்விகள் இந்த போராட்டம் நடத்தும் மாணவர்களைப் பற்றியதுதான்.

அவர்கள் போராட்டம் நடத்த தகுதியானவர்கள்தானா?

பெற்றோரிடம் பாக்கெட் மணி வாங்கிக் கொண்டு, டிஸ்கோதே, பார் என்றும் கேர்ள் பிரண்ட்ஸ், கேசுவல் செக்ஸ் என்று சுத்தி கொண்டிருப்பவர்களுக்கு கிராமப் புறங்களில் இருக்கும் மக்களைப் பற்றியும், இன்றும் பலவாறு பின்தங்கி இருக்கும் மக்களின் நிலை நிஜமாகவே தெரியுமா?

இவர்கள் பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் பற்றி முழுவதும் புரிந்து கொள்ளாமலேயே போராட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் அவர்கள் செய்வது சரி தவறு என்று கூறவில்லை, பிரச்சனையை முழுவதுமாக புரிந்து கொள்ளாமலேயே போராட்டம் நடத்துகிறார்களோ என்று சுப்ரீம் கோர்ட் போலவே வியக்கிறேன்.

Thursday, May 18, 2006

டாவின்சி கோட் தற்காலிக தடை நீக்கம்

தடை என்று செய்தி வெளியிட்டவுடன் அந்தப் பதிவில் பின்னூட்டம் வழியாக ஒரு மதக் கலவரமே நடந்து விட்டது. இப்பொழுது தடை நீங்கி விட்டது.

என்னைக் கேட்டால் பயர் படப் பிரச்சனை விட இந்தப் பிரச்சனை மிக கம்மியான அளவிளேயே வெளிப்பட்டது.

80% ஹிந்துக்கள் பயர் பிரச்சனையை பூதாகரமாக வெடிக்கச் செய்தார்கள்.

1 - 2 % கிறிஸ்துவர்களும் அவர்களால் முடிந்த அளவு பிரச்சனை செய்து விட்டார்கள்.

பொழுதுபோக்கிற்கு இவ்வளவு பிரச்சனை.

மொத்தத்தில் இந்தியா மதச் சார்பற்ற நாடு அல்ல. நிறைய மதங்களின் சார்பு கொண்ட நாடு என்றுதான் தெரிகிறது.

மொத்தத்தில் இந்தியாவை ராமரும், கிறிஸ்துவும், முகமது நபிகளும் காக்க முடியாது.

Tuesday, May 16, 2006

டாவின்சி கோட் படம் இந்தியாவில் தற்காலிக தடை

டாவின்சி கோட் படம் இந்தியாவில் தற்காலிக தடை செய்யப்பட்டது.

இன்னோவேடிவில் முன் பதிவு செய்தது வீணாகி விட்டது.

இங்கிலாந்திலும், அமெரிக்கா, பிரான்ஸில் தடை செய்யப் படாத படம் இந்தியாவில் மட்டும் தடை ஏன்?

டாவின்சி கோட் பொய் பறை சாற்றுகிறது என்று சொல்பவர்கள் பைபிள் மட்டும் எப்படி உண்மை சொல்கிறது என்று சொல்ல முடியும்.

பைபிளை கிறிஸ்து அவர்கள் எழுதவில்லையே அவர் கடவுள் என்று நினைத்த மனிதர்கள் எழுதியதுதானே?

விமர்சனங்களை தாங்க முடியாதவர்கள் ஏன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்ல வேண்டும்?

திரும்ப சென்று முன் பதிவை ரத்து செய்ய வேண்டும்

Tuesday, May 02, 2006

ரசித்த படம் ஹேராம்

கமல் தன்னுடைய கனவுப் படம் என்று மருத நாயகம் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் வெளியாகுமோ அல்லது வெளியாகாதோ தெரியாது ஆனால் கமல் என்ற கலைஞன் ஹேராம் என்ற படம் எடுத்ததின் மூலம் தமிழக திரையுலகில் சாகாவரம் பெற்று விட்டான் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

புதிய பறவை என்று சிவாஜி நடித்த திரைப்படம் பற்றி கூறும் சமயம் "இது போன்ற படங்களை ஏற்றுக் கொள்ளும் மனோபாவங்கள் மக்களிடம் இல்லாத சமயத்தில் வெளிவந்து விட்ட திரைப்படம்" என்று கூறுவார்கள்.

ஹேராம் படத்தில் இருந்த முத்தக் காட்சிகளும் அது போல அமைந்தது வருத்ததிற்குரியது. தமிழன் அது போன்ற காட்சிகளை ஜீரணம் செய்து கொள்ள முடியாததாலேயே இந்தப் படம் அது பெற்றிருக்க வேண்டிய வெற்றியைப் பெறவில்லை என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் கூறுவார்கள் " நிஜ உலகில் கதா நாயர்கள் பிரம்மிக்கத்தக்க காரியங்களை தொடர்ந்து செய்வதில்லை" அதாவது நிஜ உலகில் சூப்பர் மேன் கதா நாயகனாக இருப்பதில்லை. " நிஜ வாழ்வில் ஒரு சாதாரண மனிதன் ஒரு சாதாரணமான சமயத்தில் பிரம்மிக்கத்தக்க காரியம் செய்யும் சமயம் கதா நாயகனாகிறான்".

அதாவது நிஜ வாழ்வில் கதா நாயகன் உதாரண புருஷர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம்.

காந்திஜீயும் ஒரு சாதாரண மனிதரே, அவரிடம் ஒரு சாதாரண மனிதரிடம் உள்ள குறைகள் அனைத்துமே இருந்தது, ஆனால் அந்தக் குறைகளையும் தாண்டி அவர் நிஜ வாழ்வில் ஒரு கதா நாயகர் அதற்கு மேலும் ஒரு வார்த்தை உண்டெனில் அதற்கும் உரித்தானவர்.

இந்தக் கதையின் நாயகன் சாகேத் ராமும் தன்னுடைய காதல் மனைவி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப் பட்டவுடன் துப்பாக்கி தூக்கிக் கொண்டு கண்டவரை எல்லாம் சூடும் ஒரு சராசரி மனிதன்தான். அவன் மேலும் எவ்வளவு சராசரி என்பதை கதை மேலும் நமக்கு காட்டுகிறது. தன் மனைவி காதலித்தாலும், ஒரு அழகான அப்பாவி பெண் கண்டு திருமணம் செய்யதாகட்டும், தன் மனைவியின் மரணத்திற்கு காந்திதான் காரணம் என்று கூறுவதை நம்புவதாகட்டும் சாகேத் ராம் ஒரு சராசரி மனிதன்தான் என்பதை திரும்ப திரும்ப நாம் உணர்கிறோம்.

ஆனால் திரைப்படம் ஒரு சாரசரி மனிதனின் பயணம் பற்றி இருக்க முடியாதே அதனால் எப்படி சாகேத் ராம் கதா நாயகன் ஆகிறான்? சூழ் நிலைகள் அவன் தன்னுடைய நிலை விட்டு விலகி அன்றிருந்த சூழ் நிலைகளின் சாட்சியாக்கி விடுகிறது. அவனுடைய நண்பனின் மரணம், அவன் எதிரிகள் என்று நினைக்கும் மனிதர்களின் நிலையை காட்டுகிறது. அதனால் அன்றிருந்த ஒட்டு மொத்த சூழ் நிலைகளின் சாட்சியாகி இந்தக் கதையின் நாயகனாகிறான். மத சூழ் நிலையின் ஒட்டு மொத்த சாட்சியாக இருக்கும் சாகேத் ராமின் மரணமும் மதக் கலவரங்களில் இடையே நிகழ்கிறது.

ஒரு சில படத்தில் மட்டுமே அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்தப் படம் அந்த ஒரு சில படங்களில் ஒன்று. கமலின் நடிப்பு பற்றி நான் சொல்லி தெரிய எதுமில்லை, ஷாருக்கின் பாத்திரம் சிறியதாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார், அப்பாவி பெண்ணாக வசுந்திரா கச்சிதம்.

ஆனால் இந்தப் படத்தில் கமலையே தூக்கிச் சாப்பிட்டிருப்பவர் அதுல் குல்கர்னி அருமையான நடிப்பு.

இசை ஞானி இளையராஜா ஒரு அற்புதம் என்பதை பிண்ணணி இசையும் பாடல்களும் பறைசாற்றும்.

காந்தி தேசப்பிரிவின் சமயம் எடுத்திருந்த நிலைப் பாட்டின் காரணமாகவே கொலை செய்யப்பட்டார் என்பதையும் அந்த நிலைப்பாடு ஏன்? அதனை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை? ஏன் அவர்கள் பார்வையில் காந்தி ஒரு வில்லனாகத் தெரிந்தார்? என்பதைப் பற்றியெல்லாம் படமெடுத்திருக்கிறான் ஒரு தமிழ் கலைஞன் என்பதில் நானும் தமிழன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

காந்தியின் நிலைப்பாட்டைப் பற்றி என் கருத்துக்கள் அடுத்தப் பதிவில்.

Wednesday, April 26, 2006

மிகவும் ரசித்த தமிழ்ப் படம் - கன்னத்தில் முத்தமிட்டால்

தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் மிகவும் பிடித்த தமிழ் படம் என்ன என்று பேச்சு வந்தது, உடனே என் மனதில் தோன்றிய படம் "கன்னத்தில் முத்தமிட்டால்".

தாயை காணத் துடிக்கும் குழந்தை தாயின் நாடு செல்ல, அங்கே அந்த குழந்தையின் தாய், தாய் நாடென்று தன் குழந்தை மட்டும் அல்ல, எந்த குழந்தையும் சொல்ல இயலாத நிலை உள்ளதால் அதற்காக போராடும் போராளியாக இருக்கிறாள். தன் தாய் நாடென்று தன் குழந்தையின் குழந்தைகளாவது சொல்ல வேண்டும் என்று நிகழும் போராட்டங்களை கண் முன் நிறுத்தி இருப்பார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் மிகவும் ரசித்த மூன்று காட்சிகள்

"விடை கொடு எங்கள் நாடே,கடல் வாசல் தெளிக்கும் வீடே, பனை மரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை காண்போமா?" என்று ஒலிக்கும் எம். எஸ். வி. குரலும் அந்த பாடலுக்கு படப்பதிவும் நெஞ்சில் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் கசக்கி பிழிந்து கண்களில் நீரை கொணர செய்தது. "எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம், எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புகையிலே புதைத்தோம்" என்ற வரிகளில் உயிரே உருகி விட்டது போல ஒரு உணர்வு.

கதை ஒரு குழந்தையின் தேடல் என்பதால் குழந்தையும், தாயும் சந்திக்கும் காட்சி உணர்வு பூர்வமாக இருந்ததில் வியப்பில்லை. நந்திதா தாஸ் ஒரு அற்புதமான நடிகை என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிருபித்திருக்கும் காட்சி.

உணர்வுப் பூர்வமான படத்தில் நாயகன் நாயகி காதல் சொல்ல 15 நிமிடங்களே இருந்தாலும் "சட்டென நனைந்தது நெஞ்சம்" என்று இரண்டு நிமிடங்களில் காதலை கவிதையாக சொல்லி இருப்பார். தற்கொலை படைப் படையைச் சேர்ந்த இளைஞர் இயல்பாக பேசி கொண்டே அடுத்த கணத்தில் காரின் முன் விழும் காட்சியும் மிகச் நல்ல காட்சியே.

இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மிகவும் இயல்பாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன், மாதவன், மகாதேவன் என்று அனைவரும் இயல்பாக நடித்திருப்பார்கள். அஞ்சலி படத்திலேயே குழந்தைகளை வைத்து வேலை வாங்குவதில் தன்னை நிருபித்த மணிரத்னம் இந்தப் படத்தில் மீண்டும் கலக்கியிருக்கிறார். கீர்த்தனாவின் நடிப்பு இந்த படத்தின் பலம்.

ஒளிப்பதிவு பற்றி பாடம் சொல்லிக் கொடுக்கும் இடங்களில் இந்த படத்தை ஒளிபரப்பி சொல்லிக் கொடுக்கலாம். அற்புதம்.

இசை "விடை கொடு எங்கள் நாடே", "ஒரு தெய்வம் தந்த பூவே" போன்ற பாடல்கள் அற்புதமாக அமைத்திருக்கிறார் ரஹ்மான்.

இந்த படம் அற்புதமாக வந்திருந்தாலும் ஒரு சிறிய குறை என்னவெனில் ஒரு குழந்தையின் தேடல், இலங்கைப் போராட்டம் இரண்டையும் ஒன்றாக தந்திருப்பதால் இரண்டின் முழுத் தாக்கமும் நம்மை வந்து அடையவில்லை என்பதுதான்.

ஆனாலும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.

விடை கொடு எங்கள் நாடே
கடல்வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே!
பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!
விடை கொடு எங்கள் நாடே
கடல்வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே!
பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!

கந்தல் ஆனாலும் தாய்மடி போல் ஒருசுகம் வருமா?வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர்போல் சுதந்திரம் வருமா?வருமா?
கண்திறந்த தேசம் அங்கேகண்மூடும் தேசம் எங்கே?
பிரிவோம் நதிகளே
பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர்த் திரையில் பிறந்த மண்ணைக்
கடைசியாகப் பார்க்கின்றோம்

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டுப் புகையிலே புதைத்தோம்
முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல்நீர்ப் பறவைகாள்
இருந்தால் சந்திப்போம்
வனமே நதிகளே
வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே! பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!

Tuesday, April 25, 2006

இயேசு கிறிஸ்து திருமணம் ஆனவரா ஒரு அலசல்

டாவின்சி கோட் நாவல்தான் முதன் முதலில் இந்த கேள்வியை என்னுள் எழுப்பியது.

இதைப் பற்றி வலைதளங்களில் தேடும் சமயம் இது பல நாட்களாக இருக்கும் ஒரு சர்ச்சை என்பதை அறிய முடிந்தது.

ஆகவே பல நாட்களாக பல வலைத் தளங்கள் மற்றும் புத்தகங்களைப் படித்தும் எனக்குக் கிடைத்த தகவல்களையும் என்னுடய கருத்துக்களையும் இங்கு கொடுக்கிறேன்.

இந்த அலசலை முதலில் உறுதி படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்

மேரி மங்லாடின் விபச்சாரி அல்ல

பல வல்லுனர்களும் உறுதி செய்யும் தகவல் இது. கிறிஸ்து ஒரு விபச்சாரியை மக்கள் கல் கொண்டு அடிக்கும் சமயம் பாவம் செய்யாதவர் மட்டும் இந்த பெண்ணை அடிக்கலாம் என்று கூறியது உண்மை ஆனால் இந்தப் பெண் மேரி மங்லாடின் அல்ல என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட ஒரு விசயம். டாவின்வி கோட் நாவலில் மேரி மங்லாடினின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகதான் அவரை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு கோணத்தில் சரி என்றே சொல்லலாம் போப் கிரிகாரி என்பவர்தான் முதன் முதலில் மேரி மங்லாடினை விபச்சாரி என்று கூறினார். 1969ம் வருடம் கிறிஸ்துவ தேவாலயம் மேரி மங்லாடினும், அந்த விபச்சாரியும் வேறு வேறு நபர்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

பைபிள் 100 சதவீதகம் உண்மையை சொல்லவில்லை

இதை உறுதி படுத்திக் கொள்ளப் பட்ட தகவல்களில் சேர்ப்பதே சர்ச்சைக்குரியதுதான். ஆனால் இதில் உண்மை உள்ளது என்பதை பலர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். பைபிளில் என்தெந்த பகுதிகள் வைக்கப் பட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தவர்கள் கிறிஸ்து கடவுள் என்று தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆகவே அவர்கள் கிறிஸ்துவை தெய்வப் பிறவியாக காட்டும் பகுதிகளேயே வைத்தார்கள் என்பது உண்மை. பைபிளில் அவருடைய சீடர்கள் எழுதிய பல பகுதிகள் வைக்கப் படவில்லை. இன்று நமக்கு டெல் ஸீ ஸ்கூரொல் போன்றவை கிடைத்துள்ளன அவை கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவரை ஒரு தெய்வப் பிறவி என்ற நோக்கில் அல்லாமல் ஒரு தலை சிறந்த தலைவனாக சித்தரிகிறது. நாம் இந்த ஆவனங்களை பொய் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது ஏனெனில் இதுவும் கிறிஸ்து அவர்களில் சீடர்களாலேயே எழுதப்பட்டது. இது பொய் எனில் பைபிள் மட்டும் எந்த அளவு உண்மை??

இதன் பிறகு நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை.

டாவின்சியின் லாஸ்ட் சப்பர் கிறிஸ்து பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திகிறது

டாவின்சி கோட் நாவலின் மிக முக்கிய கிறிஸ்துவின் திருமணத்திற்கு முக்கிய ஆதாரமாக காண்பிக்க படுவது டாவின்சியின் லாஸ்ட் சப்பர் ஓவியம்தான். இந்த ஓவியத்தை இங்கே கீழே பாருங்கள்




இந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் இடது புறத்தில் உள்ளது ஒரு பெண் அது மேரி மங்லாடின் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுடய ஆடைகளையும் கவனியுங்கள் கிறிஸ்துவின் ஷாலும், மேரியின் மேலாடையும் மேரியின் ஷாலும் கிறிஸ்துவின் சட்டையும் ஒத்திருப்பதைக் காணுங்கள். டாவின்சி அப்படி வரைந்தது இருவரும் கணவன் மனைவி என்பதைக் குறிக்கத்தான் என்று டாவின்சி கோட் நாவலில் கூறப்படுகிறது. மேலும் இருவருடைய ஷாலும் அதற்கு நடுவே உள்ள இடைவெளியும் M என்ற சொல் உருவாவது போல தோன்றுகிறது பாருங்கள் இந்த சொல் மேரியை குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விசயம் என்னவென்றால் தன்னுடய கடைசி உணவைக் கொண்ட சமயம் கிறிஸ்து ஒரு கோப்பையில் வைண் பருகிய பின் அந்த ஒரு கோப்பையில் இருந்தே அவருடய சீடர்கள் அனைவரும் பின் வைண் பருகினார்கள் என்றுதான் இன்று வரை கூறப்பட்டு வருகிறது. அந்த கோப்பையே புனிதக் கோப்பை என்று அழைக்க படுகிறது அதுவே இன்று உலகில் மிகவும் தேடப்பட்டு வரும் புதையல். ஆனால் இந்த படத்தில் அந்த கோப்பை இல்லவே இல்லை. டாவின்சி மேரி மக்லாடினையே புனிதக் கோப்பையின் வடிவாக கருதி வரைந்துள்ளார் என்றும் டாவின்சி கோட் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் கிறிஸ்துவின் அருகில் உள்ளது ஜான் என்று கூறுகிறார்கள். ஆனால் M என்ற எழுத்திற்க்கும் புனிதக் கோப்பை பற்றியும் ஒரு விளக்கமும் இல்லை.

கிறிஸ்து ஒரு யூதர் ஆகவே அவர் திருமணம் செய்திருக்க வேண்டும்.

கிறிஸ்து வாழ்ந்த கால கட்டத்தில் யூதர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ் நிலை நிழவியது ஆகவே அவருக்கும் திருமணம் நடந்திருக்க வேண்டும்.

இந்தக் கருத்து பற்றியும் வல்லுனர்கள் கிறிஸ்து ஒரு விதிவிலக்காக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யூதர்களின் பழக்க வழக்கங்கள் இருந்ததும் உண்மை.

கினாஸ்டிக் காஸ்பலிஸில்( Gnostic Gospels ) கிறிஸ்துவிற்க்கும் மேரிக்கும் காதல் இருந்திருக்கலாம் போன்று இருக்கும் பகுதிகள்.

கினாஸ்டிக் காஸ்பலிஸ் என்பது சில வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது இது கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவருக்கு மேரியுடன் காதல் இருந்தது என்பதைப் போன்று எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்து மேரியை முத்தமிடுவது போன்று சில பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த ஆவனங்களை நம்ப முடியாது என்று கூறுகிறனர். சிலர் கிறிஸ்து தன்னுடய சீடர்கள் அனைவரையுமே முத்தமிடுவார் என்று கூறுகிறார்கள்.

இது வரை நான் சேகரித்த தகவல்களை கூறி வந்தேன் இப்பொழுது இதைப் பற்றி என்னுடய கருத்துக்கள்.

டாவின்சி கோடில் எனக்கு பிடித்த ஒரு வசனம் பைபிள் சொர்க்கத்தில் இருந்து பேக்ஸில் வரவில்லை என்ற வசனம்.

என்னைப் பொறுத்த வரை பசி இல்லாமல் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று பாடு படும் அனைவரும் தெய்வப் பிறவிகள்தாம் அந்த வகையில் கிறிஸ்துவும் தெய்வப் பறவிதான்.

வாடிகன் நகரம் கிறிஸ்துவின் பெயராலே, போப் என்ற ஒருவரின் கருத்திக்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு வருகிறது. பல போப்புகள் மிக நன்றவர்களாகவே இருந்தாலும் சிலர் சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை கொல்வது, சிலுவை யுத்தம் என்று நாடுகள் மேல் படை எடுப்பது என்று தவறான பல காரியங்களை செய்துள்ளார்கள். இன்று உள்ள மத தீவிரவாதம், நிறக் கொடுமை போன்ற விசயங்கள் தேவாலங்களில்தான் ஆரம்பித்தது.

இங்கு கூற வருவது என்னவெனில் கிறிஸ்து என்பவர் தெய்வப் பிறவியாக இருக்கலாம் ஆனால் வாடிகன் நகரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு இல்லை.

ஆகவே கிறிஸ்து உண்மையாக திருமணம் ஆனவராக இருந்தாலுமே அதை மறைக்க வேண்டும் என்று வாடிகன் முடிவு செய்திருந்தால் அது அவ்வாறே நடந்திருக்கும்.

கிறிஸ்து திருமணம் ஆனவாரா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை என்று பதில் சொல்லக் கூடிய நிலை இல்லை என்று பதிவை முடிக்கிறேன்

Monday, April 24, 2006

டாவின்சி கோட் - இயேசு கிறிஸ்து திருமணமானவர் என்ற நாவல்

இயேசு கிறிஸ்துவிற்கு திருமணமாகிவிட்டது அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவர் ஒரு சராசரி மனிதன், கடவுளின் குழந்தை அல்ல.

டான் பிரவுன் அவர்களின் நாவலான டாவின்வி கோட் நாவலில் ராபர்ட் லாங்டன் என்ற கதாபாத்திரம் சோபியா என்ற பாத்திரத்திடம் இவ்வாறு கூறும் சமயம் சோபியா மட்டும் அல்ல எனக்கும் தூக்கிவாரிப் போட்டது.

என்னை முதன் முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை வித்தியாசமான ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது டாவின்சி கோட் நாவல்தான்.

இந்த நாவலின் ஆரம்பம் லாவுரே( Louvre ) என்ற மியுசியத்தில் ஆரம்பிக்கிறது. அந்த மியுசியத்தின் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார்.அவர் இறக்கும் நேரத்தில் அவர் விழுந்து கிடக்கும் இடத்தில் ராபர்ட் லாங்டன் பெயரையும் சில எண்களையும் சில வார்த்தைகளையும் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். ராபர்ட் லாங்டனை ஹாவர்ட் பல்கலை கலகத்தில் சரித்திரம் மற்றும் கூறியீட்டியல் பேராசிரியர். சரித்திர ஆராய்ச்சி செய்து வருபவர்.

அங்கு வரும் காவல்த்துறை ராபர்ட் லாங்டன் பெயரை பார்த்து விட்டு ராபர்ட்தான் கொலை செய்தார் என்று சந்தேகம் கொண்டு ராபர்டின் பெயரை அழித்துவிட்டு சம்பவ இடத்திற்கு ராபர்டை அளைத்து வந்து விசாரணை செய்கிரார்கள்.ஜாக்குவஸின் மரண வாக்குமூலத்தில் எண்கள் இருப்பதால் கிரிப்ட்டோகிராபி துறையின் உதவியை நாடுகிறார்கள் காவல் துறையினர்.

அங்கு வேலை பார்க்கும் சோபியா ஜாக்குவஸின் பேத்தி. சோபியா அந்த செய்தியைப் பார்த்தவுடனே தன்னுடய தாத்தா தனக்காகதான் இந்த செய்தி என்பதை உணர்ந்து கொள்கிறாள். இந்த செய்தியால் ராபர்ட் கைது செய்யப்படலாம் என்பதையும் உணர்ந்து இந்த செய்தியை முழுவதுமாக புரிந்து கொள்ள ராபர்டை தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார் தன்னுடய தாத்தா என்பதயும் புரிந்து கொள்ளும் சோபியா, இதனால் ராபர்டிற்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்து ராபர்டை போலிஸில் இருந்து தப்புவிக்கிறார்.

இப்படி கொலை என்று சஸ்பென்ஸ் நாவலாக ஆரம்பிக்கும் டாவின்சி கோட் ஒரு புதையல் வேட்டையாக மாறுகிறது.ஜாக்குவஸ் இறக்கும் முன் தான் பல காலம் பாதுகாத்து வந்த ரகசியம் யாருக்கும் தெரியாமலே தொலைந்து விடக் கூடும் என்ற சூழ் நிலை உருவாகி விட்டதாலும், தன்னுடய பேத்தியான சோபியாவிற்க்கும் ஆபத்து இருக்கலாம் என்பதாலும், சோபியாவிற்கு ராபர்ட் லாங்டனை சந்திக்குமாறு விடுகதை போல ஒரு செய்தி எழுதி வைத்தார் என்பதை அறிகிறோம்.

அவர் காத்து வந்த ரகசியம் ஹோலி கிரைல்( holy grail ) எனப்படும் ஒரு கோப்பை என்று அறிகிறோம். இந்தக் கோப்பை கிறிஸ்து தன்னுடய கடைசி உணவு உண்ணும் சமயம் வைண் குடிக்க உபயோகப்படுத்திய கோப்பை என்றும் அறிகிறோம். இந்த கோப்பைதான் உலகில் உள்ள எல்லா புதையலிலும் மிக முக்கியமானது, விலை உயர்ந்தது. கிங் ஆர்தர் போன்றவர்கள் இந்த கோப்பையை கண்டு பிடிப்பதையே தன்னுடய வாழ்க்கையின் லட்சியமாக வைத்து இருந்தார்கள்.

ஆனால் சீக்கிரமே லாங்டன் ஹோலி கிரைல் என்பது உண்மையில் ஒரு கோப்பை அல்ல என்பதை விளக்கி அதன் உண்மையான அர்த்ததை விளக்கி கூறும் சமயமே நாம் முதலில் பாராவில் எழுதி இருக்கும் வசனத்தை ராபர்ட் சோபியாவிடம் கூறுகிறார்.

மேலும் கிறிஸ்து மேரி மங்லாடின் என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார் அவர்களுடய குடும்பம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார். அதற்க்கான ஆதாரங்கள் அடங்கி உள்ள ஆவனங்களே ஹோலி கிரைல் என்று அழைக்கைப் படுகிறது என்றும் கூறுகிறார்.அதை அடையுதற்காகவே ஜாக்குவஸ் கொலை செய்யப் பட்டுருக்கிறார் என்பதையும் கூறுகிறார்.இதன் பிறகு ராபர்டும், சோபியாவும் ஹோலி கிரைலை எதிரிகள் அடையும் முன் எவ்வாறு ஜாக்குவஸ் அமைத்திருக்கும் ஒவ்வொரு புதிருக்கும் விடை கண்டு பிடித்து அடைகிறார் என்பதுதான் நாவல்.

இந்த நாவல் மற்ற சஸ்பென்ஸ் நாவல்களில் இருந்து வித்தியாசப் பட்டுருப்பதற்க்கு கிறிஸ்துவின் வாழ்க்கை நாவலில் பின் புலமாக சொல்லப்பட்டுருப்பது ஒரு காரணம்.

மற்ற காரணம் என்னவென்றால் இந்த நாவலின் கதையை ஒட்டி பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப் பட்டுருப்பதுதான். உதாரணமாக என்னுடா முந்தய பதிப்பான தெய்வீக எண் என்று அழைக்கப் படும் 1.618ன் ஆச்சர்யமான விஷேசங்கள் நாவலில் கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது.

நைட்ஸ் டெம்ப்லர்(Knights Templar)( இங்கிலாந்து நாட்டில் 1500ல் இருந்த ஒரு குழுவினர் இவர்கள் திடிரென்று சில வருடங்களில் பணம், அதிகாரம் பெற்று போபைவிட பலம் வாய்ந்தவர்களாகிவிட்டர்கள். இவர்களின் பண பலம், அதிகார பலம் கண்டு பயந்த போப் இவர்களை கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்று பல வதந்திகள் இவர்களைப் பற்றி உண்டு. இன்றும் அவர்கள் எவ்வாறு பணம், அதிகாரம் அனைத்தியும் அடைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ) போன்ற சரித்திரத்தில் புதிராக இருக்கும் பல விஷயங்கள் நாவல் முழுவதும் கதையின் ஒட்டத்தினிடயே சொல்லப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு சரித்திரம் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்கள் பிடிக்கும் என்றால் இந்த நாவலை நீங்கள் கண்டிப்பாக படியுங்கள்.

கிறிஸ்து திருமணம் ஆனவரா என்பது பற்றி என்னுடய கருத்துக்கள், டாவின்சி கோடில் அதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் பற்றி அடுத்த பதிவு.

Thursday, April 20, 2006

தெய்வீக எண்

1.618 தெய்வீக எண் - டிவைன் பிரபோர்சன்( Divine Proporition )

தெய்வீக எண்ணா என்ன குழப்புகிறான் என்று எண்ணுகிறீர்களா?

விளக்குகிறேன்.

உங்களிடம் உள்ள எதெனும் ஒரு அளவுகோலை எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் முழு நீளத்தையும் அளந்து கொள்ளுங்கள்
பின் உங்கள் தொப்புள் கொடியில் இருந்து உங்கள் கால் நுனி வரை அளக்கவும்.

இந்த இரண்டு நீளங்களையும் வகுத்தால் என்ன எண் கிடைக்கும் என்று நான் கூறாமலே உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த இரண்டு நீளங்களை அளந்தால் 1.618 என்றே இருக்கும்.

இது மட்டும் அல்ல நான் கீழே கூறி இருக்கும் எல்லாமே எல்லா மனிதர்களுக்கும் ஒன்றாகவே இருக்கும்.

கை நடு விரலிலுந்து தோள் வரை அளந்து கொள்ளுங்கள்.
பின் உங்கள் கை நடு விரலிலுந்து உங்கள் கை மடங்கும் இடம் வரை அளந்து கொள்ளுங்கள்.
வகுத்து பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொள்ளுங்கள்.

மேலும்

இடுப்பில் இருந்து கால் நுனி வரை - கால் மடங்கும் இடத்தில் இருந்து கால் நுனி வரை,
விரல் நீளம் - விரல் மடங்கும் இடம் வரை
உங்கள் மூக்கின் நீளத்தை, உங்கள் கண் திறந்து இருக்கும் சமயம் உள்ள நீளத்துடன்.

இப்படி உங்கள் உடலில் உள்ள பல அளவுகள் 1.618 என்ற எண்ணின்படியே அமைத்து இருக்கும்.

இது மட்டும் அல்ல.

எந்த ஒரு தேன் கூட்டிலும் பெண் தேனீக்களின் எண்ணிக்கையை ஆண் தேனீக்களின் எண்ணிக்கையோடு வகுத்தால் கிடைக்கும் எண் 1.618.

இப்படி இந்த எல்லா நடக்கும், பறக்கும், நீந்தும் விலங்குகளில் இருந்து, தாவரங்கள் வரை அதனுடய உடல் கூறுகளை இந்த எண்ணின்படியே அமைந்து இருக்கும்.

ஆகவேதான் இந்த எண் தெய்வீக எண் என்று கூறப்படுகிறது

இந்த எண்ணில் அடிப்படையிலேயே பிரமீடுகளும் அமைக்கப் பட்டுருக்கின்றன.

எதற்காக இந்த எண் பற்றிய பதிவு?

டாவின்சி கோட் பற்றி எழுதும் முன் இந்த எண் பற்றி சொல்ல எண்ணினேன்.

இந்த எண் டாவின்சி கோடில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டாவின்சி கோட் பற்றி அடுத்த பதிவில்.

http://en.wikipedia.org/wiki/Divine_proportion visit this for more info on divine proportion.

வேதாத்திரி மகரிஷி

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி 28/03/2006 அன்று இன்னுலகை விட்டு பிரிந்தார்

பிறருக்கு மனதாலும் துன்பம் நினையாதே என்று போதித்த மகரிஷி நாம் வணக்கம் கூறுவது போல உள்ளன்போடு " வாழ்க வையகம், வாழ்க வளமுடன் " என்று கூறும் பழக்கம் கொள்ள வேண்டும் என்று போதனை செய்துள்ளார்.அவருடைய சில கருத்துக்களை இங்கு பிரசரித்துள்ளேன் படிப்பதோடு அவற்றை வாழ்க்கையிலும் கடை பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.

இன்பத்தை முறையோடு அளவுடன் அனுபவிக்க துன்பமே பெரும்பாலும் தோன்றாது ஆராய்ந்துணர்வீர்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

துன்பம் போக்கும் தூயநெறியே அன்பாம். அறமாம் அறிவின் உயர்வாகும்.

ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள், உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.

எதிர்பார்த்தல் எனும் நோயை மாற்றி மனநலம் காண எது உளதோ அதை ஏற்று உதவி செய்தே வாழ்ந்திடுவோம்.

குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.

http://vethathiri.org/tamil/swami/quotations/document_view
படித்ததில், பார்த்ததில் பிடித்ததை பற்றி எழுதுவதைப் பல நாட்களாக எழுத எண்ணி இருந்தேன் இன்று தொடங்கி விட்டேன்.

பொன்னியின் செல்வன், டாவின்சி கோட், ஜே.கே.ரோலிங் என்று பலவற்றை எழுத எண்ணியுள்ளேன்.