Wednesday, April 26, 2006

மிகவும் ரசித்த தமிழ்ப் படம் - கன்னத்தில் முத்தமிட்டால்

தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் மிகவும் பிடித்த தமிழ் படம் என்ன என்று பேச்சு வந்தது, உடனே என் மனதில் தோன்றிய படம் "கன்னத்தில் முத்தமிட்டால்".

தாயை காணத் துடிக்கும் குழந்தை தாயின் நாடு செல்ல, அங்கே அந்த குழந்தையின் தாய், தாய் நாடென்று தன் குழந்தை மட்டும் அல்ல, எந்த குழந்தையும் சொல்ல இயலாத நிலை உள்ளதால் அதற்காக போராடும் போராளியாக இருக்கிறாள். தன் தாய் நாடென்று தன் குழந்தையின் குழந்தைகளாவது சொல்ல வேண்டும் என்று நிகழும் போராட்டங்களை கண் முன் நிறுத்தி இருப்பார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் மிகவும் ரசித்த மூன்று காட்சிகள்

"விடை கொடு எங்கள் நாடே,கடல் வாசல் தெளிக்கும் வீடே, பனை மரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை காண்போமா?" என்று ஒலிக்கும் எம். எஸ். வி. குரலும் அந்த பாடலுக்கு படப்பதிவும் நெஞ்சில் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் கசக்கி பிழிந்து கண்களில் நீரை கொணர செய்தது. "எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம், எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புகையிலே புதைத்தோம்" என்ற வரிகளில் உயிரே உருகி விட்டது போல ஒரு உணர்வு.

கதை ஒரு குழந்தையின் தேடல் என்பதால் குழந்தையும், தாயும் சந்திக்கும் காட்சி உணர்வு பூர்வமாக இருந்ததில் வியப்பில்லை. நந்திதா தாஸ் ஒரு அற்புதமான நடிகை என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிருபித்திருக்கும் காட்சி.

உணர்வுப் பூர்வமான படத்தில் நாயகன் நாயகி காதல் சொல்ல 15 நிமிடங்களே இருந்தாலும் "சட்டென நனைந்தது நெஞ்சம்" என்று இரண்டு நிமிடங்களில் காதலை கவிதையாக சொல்லி இருப்பார். தற்கொலை படைப் படையைச் சேர்ந்த இளைஞர் இயல்பாக பேசி கொண்டே அடுத்த கணத்தில் காரின் முன் விழும் காட்சியும் மிகச் நல்ல காட்சியே.

இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மிகவும் இயல்பாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன், மாதவன், மகாதேவன் என்று அனைவரும் இயல்பாக நடித்திருப்பார்கள். அஞ்சலி படத்திலேயே குழந்தைகளை வைத்து வேலை வாங்குவதில் தன்னை நிருபித்த மணிரத்னம் இந்தப் படத்தில் மீண்டும் கலக்கியிருக்கிறார். கீர்த்தனாவின் நடிப்பு இந்த படத்தின் பலம்.

ஒளிப்பதிவு பற்றி பாடம் சொல்லிக் கொடுக்கும் இடங்களில் இந்த படத்தை ஒளிபரப்பி சொல்லிக் கொடுக்கலாம். அற்புதம்.

இசை "விடை கொடு எங்கள் நாடே", "ஒரு தெய்வம் தந்த பூவே" போன்ற பாடல்கள் அற்புதமாக அமைத்திருக்கிறார் ரஹ்மான்.

இந்த படம் அற்புதமாக வந்திருந்தாலும் ஒரு சிறிய குறை என்னவெனில் ஒரு குழந்தையின் தேடல், இலங்கைப் போராட்டம் இரண்டையும் ஒன்றாக தந்திருப்பதால் இரண்டின் முழுத் தாக்கமும் நம்மை வந்து அடையவில்லை என்பதுதான்.

ஆனாலும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.

விடை கொடு எங்கள் நாடே
கடல்வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே!
பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!
விடை கொடு எங்கள் நாடே
கடல்வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே!
பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!

கந்தல் ஆனாலும் தாய்மடி போல் ஒருசுகம் வருமா?வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர்போல் சுதந்திரம் வருமா?வருமா?
கண்திறந்த தேசம் அங்கேகண்மூடும் தேசம் எங்கே?
பிரிவோம் நதிகளே
பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர்த் திரையில் பிறந்த மண்ணைக்
கடைசியாகப் பார்க்கின்றோம்

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டுப் புகையிலே புதைத்தோம்
முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல்நீர்ப் பறவைகாள்
இருந்தால் சந்திப்போம்
வனமே நதிகளே
வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே! பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!

Tuesday, April 25, 2006

இயேசு கிறிஸ்து திருமணம் ஆனவரா ஒரு அலசல்

டாவின்சி கோட் நாவல்தான் முதன் முதலில் இந்த கேள்வியை என்னுள் எழுப்பியது.

இதைப் பற்றி வலைதளங்களில் தேடும் சமயம் இது பல நாட்களாக இருக்கும் ஒரு சர்ச்சை என்பதை அறிய முடிந்தது.

ஆகவே பல நாட்களாக பல வலைத் தளங்கள் மற்றும் புத்தகங்களைப் படித்தும் எனக்குக் கிடைத்த தகவல்களையும் என்னுடய கருத்துக்களையும் இங்கு கொடுக்கிறேன்.

இந்த அலசலை முதலில் உறுதி படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்

மேரி மங்லாடின் விபச்சாரி அல்ல

பல வல்லுனர்களும் உறுதி செய்யும் தகவல் இது. கிறிஸ்து ஒரு விபச்சாரியை மக்கள் கல் கொண்டு அடிக்கும் சமயம் பாவம் செய்யாதவர் மட்டும் இந்த பெண்ணை அடிக்கலாம் என்று கூறியது உண்மை ஆனால் இந்தப் பெண் மேரி மங்லாடின் அல்ல என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட ஒரு விசயம். டாவின்வி கோட் நாவலில் மேரி மங்லாடினின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகதான் அவரை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு கோணத்தில் சரி என்றே சொல்லலாம் போப் கிரிகாரி என்பவர்தான் முதன் முதலில் மேரி மங்லாடினை விபச்சாரி என்று கூறினார். 1969ம் வருடம் கிறிஸ்துவ தேவாலயம் மேரி மங்லாடினும், அந்த விபச்சாரியும் வேறு வேறு நபர்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

பைபிள் 100 சதவீதகம் உண்மையை சொல்லவில்லை

இதை உறுதி படுத்திக் கொள்ளப் பட்ட தகவல்களில் சேர்ப்பதே சர்ச்சைக்குரியதுதான். ஆனால் இதில் உண்மை உள்ளது என்பதை பலர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். பைபிளில் என்தெந்த பகுதிகள் வைக்கப் பட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தவர்கள் கிறிஸ்து கடவுள் என்று தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆகவே அவர்கள் கிறிஸ்துவை தெய்வப் பிறவியாக காட்டும் பகுதிகளேயே வைத்தார்கள் என்பது உண்மை. பைபிளில் அவருடைய சீடர்கள் எழுதிய பல பகுதிகள் வைக்கப் படவில்லை. இன்று நமக்கு டெல் ஸீ ஸ்கூரொல் போன்றவை கிடைத்துள்ளன அவை கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவரை ஒரு தெய்வப் பிறவி என்ற நோக்கில் அல்லாமல் ஒரு தலை சிறந்த தலைவனாக சித்தரிகிறது. நாம் இந்த ஆவனங்களை பொய் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது ஏனெனில் இதுவும் கிறிஸ்து அவர்களில் சீடர்களாலேயே எழுதப்பட்டது. இது பொய் எனில் பைபிள் மட்டும் எந்த அளவு உண்மை??

இதன் பிறகு நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை.

டாவின்சியின் லாஸ்ட் சப்பர் கிறிஸ்து பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திகிறது

டாவின்சி கோட் நாவலின் மிக முக்கிய கிறிஸ்துவின் திருமணத்திற்கு முக்கிய ஆதாரமாக காண்பிக்க படுவது டாவின்சியின் லாஸ்ட் சப்பர் ஓவியம்தான். இந்த ஓவியத்தை இங்கே கீழே பாருங்கள்




இந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் இடது புறத்தில் உள்ளது ஒரு பெண் அது மேரி மங்லாடின் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுடய ஆடைகளையும் கவனியுங்கள் கிறிஸ்துவின் ஷாலும், மேரியின் மேலாடையும் மேரியின் ஷாலும் கிறிஸ்துவின் சட்டையும் ஒத்திருப்பதைக் காணுங்கள். டாவின்சி அப்படி வரைந்தது இருவரும் கணவன் மனைவி என்பதைக் குறிக்கத்தான் என்று டாவின்சி கோட் நாவலில் கூறப்படுகிறது. மேலும் இருவருடைய ஷாலும் அதற்கு நடுவே உள்ள இடைவெளியும் M என்ற சொல் உருவாவது போல தோன்றுகிறது பாருங்கள் இந்த சொல் மேரியை குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விசயம் என்னவென்றால் தன்னுடய கடைசி உணவைக் கொண்ட சமயம் கிறிஸ்து ஒரு கோப்பையில் வைண் பருகிய பின் அந்த ஒரு கோப்பையில் இருந்தே அவருடய சீடர்கள் அனைவரும் பின் வைண் பருகினார்கள் என்றுதான் இன்று வரை கூறப்பட்டு வருகிறது. அந்த கோப்பையே புனிதக் கோப்பை என்று அழைக்க படுகிறது அதுவே இன்று உலகில் மிகவும் தேடப்பட்டு வரும் புதையல். ஆனால் இந்த படத்தில் அந்த கோப்பை இல்லவே இல்லை. டாவின்சி மேரி மக்லாடினையே புனிதக் கோப்பையின் வடிவாக கருதி வரைந்துள்ளார் என்றும் டாவின்சி கோட் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் கிறிஸ்துவின் அருகில் உள்ளது ஜான் என்று கூறுகிறார்கள். ஆனால் M என்ற எழுத்திற்க்கும் புனிதக் கோப்பை பற்றியும் ஒரு விளக்கமும் இல்லை.

கிறிஸ்து ஒரு யூதர் ஆகவே அவர் திருமணம் செய்திருக்க வேண்டும்.

கிறிஸ்து வாழ்ந்த கால கட்டத்தில் யூதர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ் நிலை நிழவியது ஆகவே அவருக்கும் திருமணம் நடந்திருக்க வேண்டும்.

இந்தக் கருத்து பற்றியும் வல்லுனர்கள் கிறிஸ்து ஒரு விதிவிலக்காக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யூதர்களின் பழக்க வழக்கங்கள் இருந்ததும் உண்மை.

கினாஸ்டிக் காஸ்பலிஸில்( Gnostic Gospels ) கிறிஸ்துவிற்க்கும் மேரிக்கும் காதல் இருந்திருக்கலாம் போன்று இருக்கும் பகுதிகள்.

கினாஸ்டிக் காஸ்பலிஸ் என்பது சில வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது இது கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவருக்கு மேரியுடன் காதல் இருந்தது என்பதைப் போன்று எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்து மேரியை முத்தமிடுவது போன்று சில பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த ஆவனங்களை நம்ப முடியாது என்று கூறுகிறனர். சிலர் கிறிஸ்து தன்னுடய சீடர்கள் அனைவரையுமே முத்தமிடுவார் என்று கூறுகிறார்கள்.

இது வரை நான் சேகரித்த தகவல்களை கூறி வந்தேன் இப்பொழுது இதைப் பற்றி என்னுடய கருத்துக்கள்.

டாவின்சி கோடில் எனக்கு பிடித்த ஒரு வசனம் பைபிள் சொர்க்கத்தில் இருந்து பேக்ஸில் வரவில்லை என்ற வசனம்.

என்னைப் பொறுத்த வரை பசி இல்லாமல் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று பாடு படும் அனைவரும் தெய்வப் பிறவிகள்தாம் அந்த வகையில் கிறிஸ்துவும் தெய்வப் பறவிதான்.

வாடிகன் நகரம் கிறிஸ்துவின் பெயராலே, போப் என்ற ஒருவரின் கருத்திக்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு வருகிறது. பல போப்புகள் மிக நன்றவர்களாகவே இருந்தாலும் சிலர் சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை கொல்வது, சிலுவை யுத்தம் என்று நாடுகள் மேல் படை எடுப்பது என்று தவறான பல காரியங்களை செய்துள்ளார்கள். இன்று உள்ள மத தீவிரவாதம், நிறக் கொடுமை போன்ற விசயங்கள் தேவாலங்களில்தான் ஆரம்பித்தது.

இங்கு கூற வருவது என்னவெனில் கிறிஸ்து என்பவர் தெய்வப் பிறவியாக இருக்கலாம் ஆனால் வாடிகன் நகரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு இல்லை.

ஆகவே கிறிஸ்து உண்மையாக திருமணம் ஆனவராக இருந்தாலுமே அதை மறைக்க வேண்டும் என்று வாடிகன் முடிவு செய்திருந்தால் அது அவ்வாறே நடந்திருக்கும்.

கிறிஸ்து திருமணம் ஆனவாரா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை என்று பதில் சொல்லக் கூடிய நிலை இல்லை என்று பதிவை முடிக்கிறேன்

Monday, April 24, 2006

டாவின்சி கோட் - இயேசு கிறிஸ்து திருமணமானவர் என்ற நாவல்

இயேசு கிறிஸ்துவிற்கு திருமணமாகிவிட்டது அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவர் ஒரு சராசரி மனிதன், கடவுளின் குழந்தை அல்ல.

டான் பிரவுன் அவர்களின் நாவலான டாவின்வி கோட் நாவலில் ராபர்ட் லாங்டன் என்ற கதாபாத்திரம் சோபியா என்ற பாத்திரத்திடம் இவ்வாறு கூறும் சமயம் சோபியா மட்டும் அல்ல எனக்கும் தூக்கிவாரிப் போட்டது.

என்னை முதன் முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை வித்தியாசமான ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது டாவின்சி கோட் நாவல்தான்.

இந்த நாவலின் ஆரம்பம் லாவுரே( Louvre ) என்ற மியுசியத்தில் ஆரம்பிக்கிறது. அந்த மியுசியத்தின் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார்.அவர் இறக்கும் நேரத்தில் அவர் விழுந்து கிடக்கும் இடத்தில் ராபர்ட் லாங்டன் பெயரையும் சில எண்களையும் சில வார்த்தைகளையும் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். ராபர்ட் லாங்டனை ஹாவர்ட் பல்கலை கலகத்தில் சரித்திரம் மற்றும் கூறியீட்டியல் பேராசிரியர். சரித்திர ஆராய்ச்சி செய்து வருபவர்.

அங்கு வரும் காவல்த்துறை ராபர்ட் லாங்டன் பெயரை பார்த்து விட்டு ராபர்ட்தான் கொலை செய்தார் என்று சந்தேகம் கொண்டு ராபர்டின் பெயரை அழித்துவிட்டு சம்பவ இடத்திற்கு ராபர்டை அளைத்து வந்து விசாரணை செய்கிரார்கள்.ஜாக்குவஸின் மரண வாக்குமூலத்தில் எண்கள் இருப்பதால் கிரிப்ட்டோகிராபி துறையின் உதவியை நாடுகிறார்கள் காவல் துறையினர்.

அங்கு வேலை பார்க்கும் சோபியா ஜாக்குவஸின் பேத்தி. சோபியா அந்த செய்தியைப் பார்த்தவுடனே தன்னுடய தாத்தா தனக்காகதான் இந்த செய்தி என்பதை உணர்ந்து கொள்கிறாள். இந்த செய்தியால் ராபர்ட் கைது செய்யப்படலாம் என்பதையும் உணர்ந்து இந்த செய்தியை முழுவதுமாக புரிந்து கொள்ள ராபர்டை தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார் தன்னுடய தாத்தா என்பதயும் புரிந்து கொள்ளும் சோபியா, இதனால் ராபர்டிற்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்து ராபர்டை போலிஸில் இருந்து தப்புவிக்கிறார்.

இப்படி கொலை என்று சஸ்பென்ஸ் நாவலாக ஆரம்பிக்கும் டாவின்சி கோட் ஒரு புதையல் வேட்டையாக மாறுகிறது.ஜாக்குவஸ் இறக்கும் முன் தான் பல காலம் பாதுகாத்து வந்த ரகசியம் யாருக்கும் தெரியாமலே தொலைந்து விடக் கூடும் என்ற சூழ் நிலை உருவாகி விட்டதாலும், தன்னுடய பேத்தியான சோபியாவிற்க்கும் ஆபத்து இருக்கலாம் என்பதாலும், சோபியாவிற்கு ராபர்ட் லாங்டனை சந்திக்குமாறு விடுகதை போல ஒரு செய்தி எழுதி வைத்தார் என்பதை அறிகிறோம்.

அவர் காத்து வந்த ரகசியம் ஹோலி கிரைல்( holy grail ) எனப்படும் ஒரு கோப்பை என்று அறிகிறோம். இந்தக் கோப்பை கிறிஸ்து தன்னுடய கடைசி உணவு உண்ணும் சமயம் வைண் குடிக்க உபயோகப்படுத்திய கோப்பை என்றும் அறிகிறோம். இந்த கோப்பைதான் உலகில் உள்ள எல்லா புதையலிலும் மிக முக்கியமானது, விலை உயர்ந்தது. கிங் ஆர்தர் போன்றவர்கள் இந்த கோப்பையை கண்டு பிடிப்பதையே தன்னுடய வாழ்க்கையின் லட்சியமாக வைத்து இருந்தார்கள்.

ஆனால் சீக்கிரமே லாங்டன் ஹோலி கிரைல் என்பது உண்மையில் ஒரு கோப்பை அல்ல என்பதை விளக்கி அதன் உண்மையான அர்த்ததை விளக்கி கூறும் சமயமே நாம் முதலில் பாராவில் எழுதி இருக்கும் வசனத்தை ராபர்ட் சோபியாவிடம் கூறுகிறார்.

மேலும் கிறிஸ்து மேரி மங்லாடின் என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார் அவர்களுடய குடும்பம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார். அதற்க்கான ஆதாரங்கள் அடங்கி உள்ள ஆவனங்களே ஹோலி கிரைல் என்று அழைக்கைப் படுகிறது என்றும் கூறுகிறார்.அதை அடையுதற்காகவே ஜாக்குவஸ் கொலை செய்யப் பட்டுருக்கிறார் என்பதையும் கூறுகிறார்.இதன் பிறகு ராபர்டும், சோபியாவும் ஹோலி கிரைலை எதிரிகள் அடையும் முன் எவ்வாறு ஜாக்குவஸ் அமைத்திருக்கும் ஒவ்வொரு புதிருக்கும் விடை கண்டு பிடித்து அடைகிறார் என்பதுதான் நாவல்.

இந்த நாவல் மற்ற சஸ்பென்ஸ் நாவல்களில் இருந்து வித்தியாசப் பட்டுருப்பதற்க்கு கிறிஸ்துவின் வாழ்க்கை நாவலில் பின் புலமாக சொல்லப்பட்டுருப்பது ஒரு காரணம்.

மற்ற காரணம் என்னவென்றால் இந்த நாவலின் கதையை ஒட்டி பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப் பட்டுருப்பதுதான். உதாரணமாக என்னுடா முந்தய பதிப்பான தெய்வீக எண் என்று அழைக்கப் படும் 1.618ன் ஆச்சர்யமான விஷேசங்கள் நாவலில் கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது.

நைட்ஸ் டெம்ப்லர்(Knights Templar)( இங்கிலாந்து நாட்டில் 1500ல் இருந்த ஒரு குழுவினர் இவர்கள் திடிரென்று சில வருடங்களில் பணம், அதிகாரம் பெற்று போபைவிட பலம் வாய்ந்தவர்களாகிவிட்டர்கள். இவர்களின் பண பலம், அதிகார பலம் கண்டு பயந்த போப் இவர்களை கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்று பல வதந்திகள் இவர்களைப் பற்றி உண்டு. இன்றும் அவர்கள் எவ்வாறு பணம், அதிகாரம் அனைத்தியும் அடைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ) போன்ற சரித்திரத்தில் புதிராக இருக்கும் பல விஷயங்கள் நாவல் முழுவதும் கதையின் ஒட்டத்தினிடயே சொல்லப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு சரித்திரம் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்கள் பிடிக்கும் என்றால் இந்த நாவலை நீங்கள் கண்டிப்பாக படியுங்கள்.

கிறிஸ்து திருமணம் ஆனவரா என்பது பற்றி என்னுடய கருத்துக்கள், டாவின்சி கோடில் அதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் பற்றி அடுத்த பதிவு.

Thursday, April 20, 2006

தெய்வீக எண்

1.618 தெய்வீக எண் - டிவைன் பிரபோர்சன்( Divine Proporition )

தெய்வீக எண்ணா என்ன குழப்புகிறான் என்று எண்ணுகிறீர்களா?

விளக்குகிறேன்.

உங்களிடம் உள்ள எதெனும் ஒரு அளவுகோலை எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் முழு நீளத்தையும் அளந்து கொள்ளுங்கள்
பின் உங்கள் தொப்புள் கொடியில் இருந்து உங்கள் கால் நுனி வரை அளக்கவும்.

இந்த இரண்டு நீளங்களையும் வகுத்தால் என்ன எண் கிடைக்கும் என்று நான் கூறாமலே உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த இரண்டு நீளங்களை அளந்தால் 1.618 என்றே இருக்கும்.

இது மட்டும் அல்ல நான் கீழே கூறி இருக்கும் எல்லாமே எல்லா மனிதர்களுக்கும் ஒன்றாகவே இருக்கும்.

கை நடு விரலிலுந்து தோள் வரை அளந்து கொள்ளுங்கள்.
பின் உங்கள் கை நடு விரலிலுந்து உங்கள் கை மடங்கும் இடம் வரை அளந்து கொள்ளுங்கள்.
வகுத்து பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொள்ளுங்கள்.

மேலும்

இடுப்பில் இருந்து கால் நுனி வரை - கால் மடங்கும் இடத்தில் இருந்து கால் நுனி வரை,
விரல் நீளம் - விரல் மடங்கும் இடம் வரை
உங்கள் மூக்கின் நீளத்தை, உங்கள் கண் திறந்து இருக்கும் சமயம் உள்ள நீளத்துடன்.

இப்படி உங்கள் உடலில் உள்ள பல அளவுகள் 1.618 என்ற எண்ணின்படியே அமைத்து இருக்கும்.

இது மட்டும் அல்ல.

எந்த ஒரு தேன் கூட்டிலும் பெண் தேனீக்களின் எண்ணிக்கையை ஆண் தேனீக்களின் எண்ணிக்கையோடு வகுத்தால் கிடைக்கும் எண் 1.618.

இப்படி இந்த எல்லா நடக்கும், பறக்கும், நீந்தும் விலங்குகளில் இருந்து, தாவரங்கள் வரை அதனுடய உடல் கூறுகளை இந்த எண்ணின்படியே அமைந்து இருக்கும்.

ஆகவேதான் இந்த எண் தெய்வீக எண் என்று கூறப்படுகிறது

இந்த எண்ணில் அடிப்படையிலேயே பிரமீடுகளும் அமைக்கப் பட்டுருக்கின்றன.

எதற்காக இந்த எண் பற்றிய பதிவு?

டாவின்சி கோட் பற்றி எழுதும் முன் இந்த எண் பற்றி சொல்ல எண்ணினேன்.

இந்த எண் டாவின்சி கோடில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டாவின்சி கோட் பற்றி அடுத்த பதிவில்.

http://en.wikipedia.org/wiki/Divine_proportion visit this for more info on divine proportion.

வேதாத்திரி மகரிஷி

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி 28/03/2006 அன்று இன்னுலகை விட்டு பிரிந்தார்

பிறருக்கு மனதாலும் துன்பம் நினையாதே என்று போதித்த மகரிஷி நாம் வணக்கம் கூறுவது போல உள்ளன்போடு " வாழ்க வையகம், வாழ்க வளமுடன் " என்று கூறும் பழக்கம் கொள்ள வேண்டும் என்று போதனை செய்துள்ளார்.அவருடைய சில கருத்துக்களை இங்கு பிரசரித்துள்ளேன் படிப்பதோடு அவற்றை வாழ்க்கையிலும் கடை பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.

இன்பத்தை முறையோடு அளவுடன் அனுபவிக்க துன்பமே பெரும்பாலும் தோன்றாது ஆராய்ந்துணர்வீர்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

துன்பம் போக்கும் தூயநெறியே அன்பாம். அறமாம் அறிவின் உயர்வாகும்.

ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள், உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.

எதிர்பார்த்தல் எனும் நோயை மாற்றி மனநலம் காண எது உளதோ அதை ஏற்று உதவி செய்தே வாழ்ந்திடுவோம்.

குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.

http://vethathiri.org/tamil/swami/quotations/document_view
படித்ததில், பார்த்ததில் பிடித்ததை பற்றி எழுதுவதைப் பல நாட்களாக எழுத எண்ணி இருந்தேன் இன்று தொடங்கி விட்டேன்.

பொன்னியின் செல்வன், டாவின்சி கோட், ஜே.கே.ரோலிங் என்று பலவற்றை எழுத எண்ணியுள்ளேன்.