Thursday, May 18, 2006

டாவின்சி கோட் தற்காலிக தடை நீக்கம்

தடை என்று செய்தி வெளியிட்டவுடன் அந்தப் பதிவில் பின்னூட்டம் வழியாக ஒரு மதக் கலவரமே நடந்து விட்டது. இப்பொழுது தடை நீங்கி விட்டது.

என்னைக் கேட்டால் பயர் படப் பிரச்சனை விட இந்தப் பிரச்சனை மிக கம்மியான அளவிளேயே வெளிப்பட்டது.

80% ஹிந்துக்கள் பயர் பிரச்சனையை பூதாகரமாக வெடிக்கச் செய்தார்கள்.

1 - 2 % கிறிஸ்துவர்களும் அவர்களால் முடிந்த அளவு பிரச்சனை செய்து விட்டார்கள்.

பொழுதுபோக்கிற்கு இவ்வளவு பிரச்சனை.

மொத்தத்தில் இந்தியா மதச் சார்பற்ற நாடு அல்ல. நிறைய மதங்களின் சார்பு கொண்ட நாடு என்றுதான் தெரிகிறது.

மொத்தத்தில் இந்தியாவை ராமரும், கிறிஸ்துவும், முகமது நபிகளும் காக்க முடியாது.

7 comments:

said...

//மொத்தத்தில் இந்தியா மதச் சார்பற்ற நாடு அல்ல. நிறைய மதங்களின் சார்பு கொண்ட நாடு என்றுதான் தெரிகிறது.
//
அட! Group dance என்பதே Multiple Solo Dance தானே.

said...

தடையும் தற்காலிகம். தடை நீக்கமும் தற்காலிகமா? என்னதான் நடக்குதோ....படத்துல வெட்டுகள் இருக்கும் போல அப்ப...வெளிநாட்டுல இருந்து வர்ர திருட்டு டீவிடியே சரணம்.

said...

சீனு குருப் டான்ஸில் ஆளுக்கு ஒரு புறம் ஆடினால் என்னவாகும்.

டான்ஸ் கண்றாவி ஆகி விடும்.

இங்கே நிலைமையும் அது போலதான் உள்ளது.

இன்னும் பாருங்க கட் பண்ணிவிட்டார்கள் என்று ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினருடன் அடித்துக் கொள்வார்கள்.

said...

///அட! Group dance என்பதே Multiple Solo Dance தானே. ///

கலக்கறீங்க்க சீனு...ரசித்து சிரித்தேன்..

said...

ரவி உங்களுக்கு சிரிப்பாக உள்ளது எனக்கு வேதனையாக உள்ளது.

said...

குமரன், BP செக் பன்னுங்க...

இந்திய நாட்டில் நடக்குற நிகழ்வுகளுக்கு எல்லாம் வருத்தப்பட்டா நாம தான் நொந்து நூலாகி நூடுல்ஸ் ஆகனும்..

கொஞ்சம் லூஸ்ல விடுங்க...நம்ம டென்ஷன் குறையும்...

said...

//
என்னைக் கேட்டால் பயர் படப் பிரச்சனை விட இந்தப் பிரச்சனை மிக கம்மியான அளவிளேயே வெளிப்பட்டது.

80% ஹிந்துக்கள் பயர் பிரச்சனையை பூதாகரமாக வெடிக்கச் செய்தார்கள்.

1 - 2 % கிறிஸ்துவர்களும் அவர்களால் முடிந்த அளவு பிரச்சனை செய்து விட்டார்கள்.
//

இது கம்மி, அது ஜாஸ்தி என்பதெல்லாம் விடுங்கள், எங்கே போனார்கள் இந்த ஷபான ஆஸ்மி, அருந்ததி ராய் மற்றும் இன்ன பிற" கருத்துச் சுதத்ந்திரம் "பறி போகிறது என்று கதரியவர்கள் (முக்கியமாக ஃபயர் படத்தின் போதும், ஹுசைன் வரைந்த ஆபாசச் சித்திரத்தின் போதும்).

ஒரு அரசாங்கம் மதசார்பற்ற நிலை எடுப்பது நல்லது, தனி மனிதன் மதச்சார்பற்றவனாக இருக்கவேண்டும் என்பது ஏற்ருக் கொள்ளமுடியாதது.

அந்த வகையில் இந்திய அரசு இத்தகய பிரச்சனிகளில் நடந்து கொண்டது சரியா...தற்காலிக தடை, தற்காலிக தடை நீக்கம், பிறகு வெட்டுக்கள்..!!

ஒரே கூத்து தான் போங்க...!! இதுக்கு நடுவுல தடை செய்தது சரியே, அது தான் மதச்சார்பற்றது என்றெல்லாம் வாதித்தார்கள்...!!

ஏப்பெ சாப்பையா ஒரு ஃபயர் படத்துக்கு இப்புடி பிள்டப் குடுத்துதான் அது பிச்சிகிட்டு ஓடிச்சு...

அதே தான் இங்கெயும் நடக்கப் போவுது...! சும்மாவே ஹாலிவுட்லெ special effect தூக்கலா இருக்கும்...இப்பொ இந்த எதிர்ப்பு "பிள்டப்பு" பைசா செலவில்லாமல் நடந்த விளம்பரம் ஆகிப் போயிருச்சு...யோசிக்குமா அந்த கத்தோலிக்க "Secular" அமைப்பு (oxymoron வார்த்தை, நான் கண்டுபிடிகவில்லை)!!

வஜ்ரா ஷங்கர்.